அணுத் திமிர் காரணமாக உலகை மிரட்டி வரும் அமெரிக்கா இதுவரை கட்டி வைத்திருந்த கற்பனைக் கோட்டை ஒவ்வொன்றாக சரிந்து விழுந்து வருகிறது. தான் என்ன செய்தாலும் உலகில் யாரும் அதைத் தட்டிக் கேட்கக் கூடாது என்ற ஆணவத்துக்கு மரண அடிகள் விழுந்து கொண்டே வருகின்றன.
Blogger
சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்
Thursday 30 December, 2010
Wednesday 1 December, 2010
வியாபாரமாகிப் போன கல்யாணம்
இங்கே நான் பதிவு செய்யப்போவது என்னை மிகவும் வெறுப்பூட்டிய நிகழ்ச்சி. என் நண்பன் இந்தப் பதிவை பார்க்கிறானா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அவனுக்கு கம்ப்யூட்டர் பற்றி அவ்வளவாகத் தெரியாது. இதற்கான நண்பன் என்னை மன்னிக்க வேண்டும். இருந்தாலும் அவனுக்கு ஒரு கண்டனத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.
Labels:
கண்டனம்
Thursday 25 November, 2010
நபிகள் நாயகத்தின் விண்வெளிப் பயணம்
உண்மை ஏட்டுக்குப் பதிலடி
தொடர் 5
மனித குலத்தின் அறிவியல் பார்வை பவ்தீகப் பொருட்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு அப்பால் செல்ல முடியாது எனக் கண்டோம். உள்ளபடியே இது நமது அறிவியல் அறிவின் இயல்பாகும். நமது அறிவியல் அறிவு என்பது ஒரு எல்லைக்குட்பட்ட கலையாகும்.
Labels:
விண்வெளிப் பயணம்
Monday 15 November, 2010
நபிகள் நாயகத்தின் விண்வெளிப் பயணம்
உண்மை ஏட்டுக்குப் பதிலடி
தொடர் 4
மெய்யான விமர்சகரின் தகுதிகளுள் சில
பேனா பிடித்தவர்களெல்லாம் விமர்சக ராக முடியாது. அதற்கென்று சில தகுதிகள் உண்டு. ஆழமான விஷயஞானம், சரியான விஷயப்பார்வை மற்றும் ஆய்வுத் திறன் என்ற முப்பெரும் தகுதிகள் ஒரு விமர்சகருக்கு இன்றியமையாததாகும். உண்மை ஏட்டின் கட்டுரையில், இதில் எந்த ஒன்றாவது இருக்கிறதா? இவர்களின் ஆய்வுத்திறனும், விஷய ஞானமும் என்ன என்பதை முன் கட்டுரைகளில் கண்டோம்.
Labels:
விண்வெளிப் பயணம்
Friday 12 November, 2010
போலி பகுத்தறிவுவாதிகள் - தொடர் 9
எந்த ஒரு கொள்கையைப் பிரதானமாக ஒருவர் பிரச்சாரம் செய்கிறாரோ அந்தக் கொள்கையை அவர் உறுதியுடன் கடைப்பிடிக்க வேண்டும். அக்கொள்கை அனைவராலும் கடைப்பிடிக்க முடியாததாக இருந்தாலும் அக்கொள்கையை ஆதரிப்பவர்களால் மட்டுமாவது அது பின்பற்றப்பட வேண்டும். உலகில் எவராலும் கடைப்பிடிக்கப் பட முடியாத எந்தக் கொள்கையும் பகுத்தறிவு சார்ந்ததாக இருக்க முடியாது.
Labels:
போலி பகுத்தறிவுவாதிகள்
Wednesday 10 November, 2010
காமக் கொடூரனை போட்டுத் தள்ளிய காவல்துறை
இத... இத... இதைத்தான் நாம் எதிர்பார்த்தோம்!
நவம்பர் 9 அன்று தீபாவளி கொண்டாடிய கோவை மக்கள்!
கோவை சம்பவத்தைப் பற்றி பதிவை போட்டு மூன்று நாள்கள் கூட ஆகவில்லை. கோவை காவல்துறையினர் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
பொது மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை நாம் தெளிவாக புரிந்து வைத்துள்ளோம். இதுபோல் பள்ளி மாணவர்கள் செல்ல பேருந்து தேவை என்பதையும் கூறி இருந்தோம் அதுவும் உடனே நிறைவேற்றப்பட்டது. ஒருவேளை கருணாநிதி அவர்கள் நமது பிளாக் ஸ்பாட்டை பார்த்து விட்டாரோ என்னவோ?
Labels:
செய்திகள்
Saturday 6 November, 2010
பள்ளிக் குழந்தைகள் கடத்தலில் நாம் படிக்க வேண்டிய பாடம்
கடந்த வாரம் தமிழகத்தில் அனைவரின் மனதிலும் மிகவும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது பள்ளிச் சிறுவர்கள் கடத்தி கொல் லப்பட்ட செய்தி. கோவையைச் சேர்ந்த முஸ்கான், ரித்திக் என்ற சகோதர சகோதரிகளை வேன் டிரை வர் ஒருவர் கடத்தி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு காவல்துறை தன்னை தேடுவதை தெரிந்தவுடன் அந்த மாணவர்களை விட்டு விடாமல் கொன்றுபோட்டது
Labels:
செய்திகள்
போலி பகுத்தறிவுவாதிகள் - தொடர் 8
திராவிடர் கழகத்தினரால் நடத்தப்படும் உண்மை எனும் ஏடு இஸ்லாத்தையும், உணர்வு இதழையும் வம்புக்கு இழுத்ததாலும், முஸ்ம்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாலும் போலி பகுத்தறிவாளர்களின் மூட நம்பிக்கைகளை அம்பலப்படுத்தும் அவசியத்தை ஏற்படுத்தித் தந்தனர்.
மூடநம்பிக்கையின் மொத்த வடிவமாக போலி பகுத்தறிவுவாதிகள் திகழ்கிறார்கள் என்பதைக் கடந்த ஏழு வாரங்களாக நாம் விளக்கி வருகிறோம்.
Labels:
போலி பகுத்தறிவுவாதிகள்
நபிகள் நாயகத்தின் விண்வெளிப் பயணம்
உண்மை ஏட்டுக்குப் பதிலடி
தொடர் 3
இஸ்லாத்தின் ஆன்மீக நம்பிக் கையில் ஒன்றான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மிஹ்ராஜ் பயணத்தின் மீது மிஸ்டர் இனியவன் நடத்திய விமர்சனம் நபிமொழி கலையிலும் அறிவியல் கலையிலும் அவருடைய அறியாமையை வெளிப்படுத்துவ தாகவே அமைந்துள்ளது என்பதை முந்தைய கட்டுரைகளில் கண்டோம்.
Labels:
விண்வெளிப் பயணம்
Thursday 4 November, 2010
போலி பகுத்தறிவுவாதிகள் தொடர் 7
பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு ஒன்றில் திருமணம் பற்றிக் கூறப்படும் மேலும் சில செய்திகளைப் பார்ப்போம்
திருமண முறையானது காட்டுமிராண்டிக் காலத்தில் அதாவது 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். அதை இன்றைக்கும் மனிதன் எதற்காக கடைப்பிடிக்க வேண்டும்? ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை
Labels:
போலி பகுத்தறிவுவாதிகள்
நபிகள் நாயகத்தின் விண்வெளிப் பயணம்
உண்மை ஏட்டுக்குப் பதிலடி
தொடர் 2
நாத்திகப் பகுத்தறிவின் பொய் முகம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட மிஹ்ராஜ் பயணம் தொடர்பாக நாத்திகப் பத்திரிகையில் வந்த விமர்சனத்திற்குரியபதிலை இத்தொடரில் நாம் பார்த்து வருகிறோம். முந்தைய தொடரில் விமர்சகரின் நபி மொழிக் கலையிலுள்ள புலமை மற்றும் அவர் பெற்றுள்ள ஆய்வுத்திறன் எந்த இலட்சணத்தில் இருந்தது என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டைக் கண்டோம். மிஹ்ராஜ் பயணத்தைப் பற்றிய அறிவியல் நிலை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
Labels:
விண்வெளிப் பயணம்
Thursday 28 October, 2010
போலி பகுத்தறிவுவாதிகள் - தொடர் 6
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம் குறித்து கிண்டலடித்து முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை விடுத்து திராவிடக் கழகத்தின் உண்மை எனும் பொய் ஏடு முஸ்லிம்களையும் உணர்வு இதழையும் வம்புக்கு இழுத்திருந்தது.
எனவே பகுத்தறிவு வேடம் போட்டுத்திரியும் இவர்கள்தான் உண்மையில் மூட நம்பிக்கையாளர்கள் என்பதைத் தக்க காரணங்களுடன் கடந்த ஐந்து வாரங்களாக நாம் அம்பலப்படுத்தி வருகிறோம்.
அதன் தொடர்ச்சியாக மேலும் சில கேள்விகளை முன் வைக்கிறோம்.
Labels:
போலி பகுத்தறிவுவாதிகள்
நபிகள் நாயகத்தின் விண்வெளிப் பயணம்
தொடர் 1
போலிப் பகுத்தறிவுவாதிகள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கான பதிலை அளிப்பதற்கு முன்னால் விமர்சிப்பவர்களிடம் காணப்படும் மூட நம்பிக்கைகளை வெளிச்சம் போட்டுக்காட்ட சகோதரர் பீ.ஜே. அவர்களின் மறுப்புக் கட்டுரை கடந்த ஐந்து பகுதிகளாக இஸ்லாமியப் பார்வையில் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் அது தொடர்ந்து வெளி வர உள்ளது.
Labels:
விண்வெளிப் பயணம்
Tuesday 26 October, 2010
சாமியார்களின் தொடரும் காம லீலைகள்
இறைவன் ஆணையும், பெண்ணையும் எதற்காகப் படைத்தான் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மனித அறிவிலிகள் சிலர் ஏற்படுத்திய தேவையில்லாத கலாச்சாரங்கள் மனித இனத்தையே அழிவுப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறது.
Labels:
செய்திகள்
Monday 25 October, 2010
சென்னை 3வது விவாதம்
மத்ஹபுக்கு வக்காலத்து வாங்கச் வந்தவர் மானத்தை இழந்தார்.
சென்னை 3வது விவாதம்.
தானாக உளறிய அப்துல்லாஹ் ஜமாலி.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் சுன்னத் வல் ஜமாத் ஐக்கியப் பேரவைக்கும் இடையில் கடந்த இரண்டு (2010-10-23.24) நாட்களாக சென்னை டி நகர் தியாகராஜர் மண்டபத்தில் வைத்து பகிரங்க விவாதம் நடந்தது.
இதில் சுன்னத் ஜமாத் ஐ.பேரவை சார்பாக ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களும் கலந்து கொண்டு விவாதித்தார்கள்.
Labels:
செய்திகள்
நண்பரின் வெற்றிக்கு உதவுவோம்
நம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்” அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது.....!! தமிழர்களாகிய நமக்கு இது மிக பெரிய பெருமை. இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில் அதிபரோ இல்லை. 'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை. சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்.......!! இது மிக பெரிய விஷயம்.....!!!
Labels:
அறிவிப்புகள்
Sunday 24 October, 2010
பர்தாவை விமர்சித்த பயங்கரவாதி!
சாத்தா குரூசில் ஒரு மாநகராட்சி மருத்துவமனையில் இரண்டு வயது ஆண் குழந்தையை பர்தா அணிந்து ஒரு பெண் கடத்திச் சென்றுவிட்ட காரணத்தால் பர்தா உடை தடை செய்யப்பட வேண்டுமென்று பாசிஸ பால்தாக்கரே தமது கட்சி பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் எழுதியுள்ளார்.
Labels:
செய்திகள்
மரணங்களைத் தடுக்க இருக்கையை மாற்ற வேண்டும்
காலையில் நாம் வேலைக்கு அறக்கப் பறக்க கிளம்பி பஸ் ஸ்டாப்பிற்கு வருவோம். இந்த முறையாவது பஸ்ஸில் இடம் பிடித்து உட்கார்ந்து கொண்டுதான் பயணம் செய்ய வேண்டும் என்று வீராவேசமாக நினைத்துக் கொண்டு பஸ் ஸ்டாப்பிற்கு வந்து பார்த்தால்தான் தெரியும்.
Labels:
செய்திகள்
Saturday 23 October, 2010
போலி பகுத்தறிவுவாதிகள் - தொடர் 5
தமிழில் அர்ச்சனை
கடவுள் இல்லை என்று ஒருபுறம் கூறிக் கொள்ளும் போலிப் பகுத்தறிவுவாதிகள் இன்னொருபுறம் கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டுமெனவும் கூறி வருகின்றனர்.
கடவுள் இல்லை என்றால் அதற்கு அர்ச்சனை செய்வதை - எந்த மொழியில் இருந்தாலும் - அதை எதிர்க்க வேண்டும். அர்ச்சனை செய்து மூடர்களாக ஆகாதீர்கள் என்று கூறி மக்களை விழிப்படையச் செய்திருக்க வேண்டும். நேர்மையான - சமரசம் செய்து கொள்ளாத - பகுத்தறிவு இப்படித்தான் தீர்ப்பளிக்கும்.
Labels:
போலி பகுத்தறிவுவாதிகள்
Monday 18 October, 2010
போலி பகுத்தறிவுவாதிகள் - தொடர் 4
பிறரை நோக்கி கேள்வி எழுப்புவோர் அதுபோன்ற கேள்விகள் தம்மை நோக்கி எழாதவாறு தமது கொள்கை கோட்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
எல்லா மதத்தினரையும் மூடர்களாகச் சித்தரித்து கேலி செய்யும் போலிப் பகுத்தறிவுவாதிகளான திராவிடர் கழகத்தினர், மதவாதிகளை மிஞ்சும் வகையில் மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடப்பதை நாம் அம்பலப்படுத்தி வருகிறோம்.
Labels:
போலி பகுத்தறிவுவாதிகள்
Thursday 14 October, 2010
போலி பகுத்தறிவுவாதிகள் - தொடர் 3
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மிஹ்ராஜ் எனும் விண்வெளிப் பயணம் குறித்து தேவையில்லாமல் விமர்சித்து திராவிட கழகத்தின் உண்மை ஏடு முஸ்லிம்களை வம்புக்கிழுத்தது.
எதற்கெடுத்தாலும் அறிவியல்பூர் வமாக நிரூபிக்க இயலுமா என்று கேட்டு தங்களை மேதாவிகள்போல் காட்டிக் கொள்ளும் போலி பகுத்தறி வுவாதிகளின் மடமைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட அவர்களே நமக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்து விட்டார்கள்.
Labels:
போலி பகுத்தறிவுவாதிகள்
Monday 11 October, 2010
போலி பகுத்தறிவுவாதிகள் - தொடர் 2
தொடர் 2
முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கும் வகையில் திராவிடர் கழகத்தின் உண்மை எனும் ஏடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மிஹ்ராஜ் எனும் விண்வெளிப் பயணம் பற்றி கிண்டலடித்து கட்டுரை எழுதியதையும், "உண்மை' ஏட்டின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு முன்னால் புரிந்து கொள்ள சில விஷயங்களையும் சென்ற இதழில் நாம் சுட்டிக் காட்டியிருந்தோம்.
Labels:
போலி பகுத்தறிவுவாதிகள்
Friday 8 October, 2010
போலி பகுத்தறிவுவாதிகளுக்கு உணர்வு பதிலடி
போலி பகுத்தறிவுவாதிகளைப் பற்றிய செய்தியை ஃபிளாஷ் அப்ளிகேஷனாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு நான் போட்டேன். இந்த அப்ளிகேஷனை கிளிக் செய்தால் உணர்வில் எப்படி லே அவுட் செய்யப்பட்டிருந்ததோ அதை படமாக நீங்கள் பார்த்து படித்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தேன். இது எனக்கு சரியாகத் தோன்றவில்லை.
எனவே அந்த செய்தியை நீங்கள் படிக்கும் விதத்தில் எழுத்தாகப் போட முடிவு செய்துள்ளேன் வேலைப் பளுவின் காரணமாக இப்படி படமாக போடலாம் என்று நினைத்திருந்தேன்.
Labels:
போலி பகுத்தறிவுவாதிகள்
Wednesday 6 October, 2010
போலி பகுத்தறிவுவாதிகளுக்கு உணர்வு பதிலடி
இறைவன் என்ற ஒருவன் இல்லை என்று கூறும் போலி பகுத்தறிவுவாதிகளான தி.க. கட்சியினர் நடத்தும் "உண்மை' நாளேட்டிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ ஏடான "உணர்வு' வார இதழ் "போலி பகுத்தறிவுவாதிகளுடன் விவாதிக்க உணர்வு அறைகூவல் : உண்மை இதழில் வெளியான செய்திக்கு பதிலடி' என்ற தலைப்பில் கடந்த ஜூலை 2008 முதல் மே 2009 வரை 21 தொடர்களாக வெளியிட்டது.
இந்த தொடர் வெளி வந்து 3 மாதங்கள் கழித்து தி.க. கட்சியைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துடன் சென்னையில் 2 நாள் நேரடி விவாதம் செய்து தங்களின் கொள்கையில் தோற்றுப்போய் ஓடி விட்டனர்.
Labels:
அறிவிப்புகள்
முக்கியமானவர்களின் மெயில்களை தனியாக பிரிக்க
உலகின் நம்பர் 1 இடத்தை கூகுள் இணைய தளம் பெற்றுள்ளதை நாம் அறிவோம். கூகுள் இணைய தளம் நமக்கு பல்வேறு பயன்பாட்டுள்ள அம்சங்களை அளித்துக் கொண்டிருப்பதால் அது முதல் இடத்தைப் பெறுவதில் ஆச்சரியமில்லை. அந்த வகையில் நம்மில் பலர் கூகுள் இணைய தளத்தில் அக்கவுண்ட் வைத்திருப்போம்.
நாம் வைத்திருக்கும் அக்கவுண்டில் இன்பாக்ஸில் பலரிடமிருந்து மெயில்கள் நமக்கு வந்திருக்கும். நாம் முக்கியமான நபர்களின் மெயில்களும் இந்த இன்பாக்ஸில்தான் இடம்பெறும். நமக்குத் தேவையான, முக்கியமானவர்களின் மெயில்களை மட்டும் தேடுவதில் பல்வேறு வழிகளை கூகுள் நமக்குத் தருகிறது.
Labels:
தொழில்நுட்பம்
Friday 1 October, 2010
அரசியல்தனமான தீர்ப்பு!
ஒருவரின் வம்சாவளியாக வந்த இடத்தை இன்னொருவர் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அதில் வேறொருவர் வாடகைக்கு இருக்கிறார். அவர்தான் வீட்டுவரி உள்பட அந்த இடத்துக்கான எல்லா பங்களிப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று பிரச்னை எழுகிறது. அந்தப் பகுதியின் முக்கியஸ்தர் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது. மூன்று தரப்பினரிடமும் பட்டாவோ, பத்திரமோ இல்லாத நிலையில், அந்த இடத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்ளக் கட்டைப் பஞ்சாயத்தில் முடிவாகிறது.
Labels:
செய்திகள்
Thursday 30 September, 2010
அறிவிப்பு
இத்தளம் இஸ்லாமியர்கள் மத்தியில் உள்ள இயக்க சிந்தனைகளை மாற்றி இம்மை மறுமை வெற்றிக்கு வழி ஏற்படுத்த ஆரம்பிக்கப்பட்டது . இதில் உள்ள குறைகளை சுட்டி காட்டினால் தவறு இருந்தால் திருத்தி கொள்கிறோம்.
Labels:
அறிவிப்புகள்
Friday 24 September, 2010
கலைஞர் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது ; அம்மா என்று சொன்னால்தான் உதடுகள் ஒட்டும் - இதுவா பகுத்தறிவு
நமது நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் மிகப் பெரிய அறிவாளிகளாகவும், சிந்தனையாளர்களாகவும் அப்பாவி மக்களால் பார்க்கப்படுகின்றனர். ஆனால் உண்மையில் சராசரி மனிதனின் அறிவை விட குறைந்த அறிவு படைத்தவர்களாகத்தான் நமது அரசியல்வாதிகள் உள்ளனர்.
Labels:
செய்திகள்
Thursday 23 September, 2010
பாடாய் படுத்தும் பன்றிக்காய்ச்சல்
கடந்த ஆண்டு அமெரிக்காவின் மெக்ஸிகோவில் பரவிய பன்றிக்காயச்சல் நோயால் பல ஆயிரம் பேர் தங்களின் உயிரை இழந்தனர். இது தொற்றுநோய் என்பதால் அங்கு வசித்து வந்த உலகின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் இந்நோய் பரவியது. இதன் மூலம் உலகின் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா இந்தக் கொடிய உயிர்க்கொல் நோயை பரப்பியது.
Labels:
செய்திகள்
கலவரத்தை ஏற்படுத்திய விநாயகர் ஊர்வலம்
விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியாக நடத்தப்படுமா? என்ற கட்டுரை போட்டு ஒரு நாள் கூட ஆக வில்லை. ஒரு செய்தி என் மனைதி வெகுவாக பாதித்தது. அதாவது ஆந்திராவில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சிலையைக் கரைக்க ஏரி, குளங்களுக்கு வந்தபோது அதில் மூழ்கி 21 பேர் இறந்துள்ளனர். இது வருந்தத்தக்க ஒன்றாகும்.
Labels:
செய்திகள்
Tuesday 21 September, 2010
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அமைதியாக நடத்தப்படுமா?
இந்தியாவைப் பொறுத்தவரை எந்த நாடுகளிலும் இல்லாத வகையில் மதச்சார்பற்ற அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதாவது எந்த ஒரு நபரும் தான் விரும்பும் மதத்தை பின்பற்றலாம். வழிபடலாம். எந்த ஒரு நபரும் எந்த ஒரு மதத்தையும் பின்பற்ற இந்திய சட்டத்தில் இடமுண்டு.
Labels:
செய்திகள்
தாம்பரத்தில் உலவும் பேய் பீதி
சமீபத்தில் சென்னை தாம்பரம் பகுதியில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடைபெற்றது. அது என்னவென்றால் தாம்பரம் ரயில்வே ஊழியர்களும், தாம்பரம் பகுதி வாசிகளும் தண்டவாளத்தில் ஒரு பூஜை செய்தனர். இந்த பூஜை எதற்கென்றால் இங்கு ஆவிகள் உலவுவதாகவும், அதனால் பலர் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் அடிபட்டு இறந்து விடுகின்றனர் என்பதாலும் இந்த பூஜை செய்தால் அங்கு உலவிக் கொண்டிருக்கும் இறந்தவர்களின் ஆவி அந்த இடத்தை விட்டு போய் விடும் என்பதற்காகவும் இந்த பூஜை நடத்தப்பட்டது.
Labels:
செய்திகள்
Sunday 12 September, 2010
Saturday 11 September, 2010
வாசகர்கள் கவனத்திற்கு :
நான் எப்போதும் யாரிடமும் வாழ்த்து சொல்வதில்லை. சிறு வயதில் சொல்லியிருக்கலாம். ஆனால் இப்போது யாருக்கும் வாழ்த்து கடிதமும் அனுப்புவதில்லை. பிறரை நாம் எப்படி வாழ்த்த முடியும். நாம் வாழ்த்தினால் அவர் நன்றாக இருந்து விடப் போகிறாரா?
Labels:
அறிவிப்புகள்
மூட நம்பிக்கையின் உச்சகட்டம்
மூட நம்பிக்கைக்கும், பைத்தியக்காரத்தனத்திற்கும் அளவே இல்லாமல் போய் விட்டது. யாரைக் கும்பிட வேண்டும். எதைக் கும்பிடக் கூடாது என்று நம்மில் பல பேருக்குத் தெரியவில்லை. இறைவன் ஒருவனைத் தவிர மற்ற அனைத்துமே அவனின் படைப்பில் உருவானதுதான்.
இப்படி இறைவன் படைத்த படைப்பைக் கண்டு மனிதன் இறைவனை வணங்காமல், அவன் தயாரித்த பொருள்களையே அவன் வணங்கும் கொடுமை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வணக்கம் என்பது இறைவன் ஒருவனுக்கு மட்டும்தான்.
Labels:
மூட நம்பிக்கைகள்
Thursday 9 September, 2010
சிறந்த ஆன்டி வைரஸ்
இணைய தளம் இல்லாமல் உலகம் இல்லை என்றாகிவிட்டது. நம்மில் பெரும்பாலானோர் இணைய தளத்தில் செல்லும்போது பாதுகாப்பில்லாமல் செல்கின்றனர். அதாவது தன்னுடைய கம்ப்யூட்டரில் தகுந்த ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் இல்லாமல் செல்கின்றனர்.
நாம் பயன்படுத்தும் பல ஆன்டி வைரஸ் சாப்ட்வேர்கள் டெமோ வர்ஷனாக கிடைக்கின்றன. இந்த டெமோ வர்ஷன் ஆன்டி வைரஸ்களைப் பயன்படுத்துவதன் மூலம் அது மிகுந்த தாக்குதலை ஏற்படுத்தும் வைரஸ்களை கட்டுப்படுத்தாது. அப்படி கட்டுப்படுத்து என்று சொன்னால் அது முழுமையான சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்திடு என்று சொல்லும்.
Labels:
தொழில்நுட்பம்
அன்பான வாசகர்களே மிகுந்த வேலைப் பளுவின் காரணமாக செய்திகளைப் போட முடியவில்லை. கிடைக்கும் சிறு சிறு நேரங்களில்தான் செய்திகளைப் போட முடிகிறது சிரமத்திற்கு வருந்துகிறோம்...
Labels:
அறிவியல்
வீணாகும் உணவு தானியங்கள்
மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?
சமீபத்தில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது வீணாகிப் போய்க் கொண்டிருக்கும் உணவு தானியங்கள் விஷயம். மத்திய அரசின் கையிருப்பில் 60 ஆயிரம் டன் உணவு தானியங்கள் (அரிசி, கோதுமை) உள்ளது. அத்தனையும் வீணாகிப் போனாலும் பரவாயில்லை...
Labels:
செய்திகள்
Wednesday 8 September, 2010
இறைவன் படைப்பில் அற்புதங்கள்
தேனை சேமிக்கும் தேனீ
தேன் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். கடவுள் படைப்பில் உலகத்தில் எவ்வளவோ அற்புதங்கள் காணக் கிடக்கின்றன. கடவுள் அற்புதத்தில் தேன் மட்டும் பல வகைகளில் நமக்கு மருந்தாக பயன்படுகிறது. தேனை நம் உடல் உபாதைகளுக்குத் தக்கவாறு பயன்படுத்தலாம்.
தேனீக்கள் தேனை எவ்வாறு சேமிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? திருக்குர்ஆன் நன்கு படித்தவர்களுக்கு மட்டுமே அதன் ரகசியம் தெரியும். தற்போது இது குறித்து ஆராய்ச்சி செய்ததின் மூலம்தான் கண்டறிந்து உள்ளனர்.
நம்மில் பெரும்பாலோர் தேனீக்கள் தேனை எவ்வாறு சேமிக்கிறது என்று ஆராய்ச்சி செய்யாமல் யாரே ஒருவர் விட்ட கதையின் மூலம் நாம் அதைப் பற்றி சிந்திக்காமல் பலரிடம் உளறிக் கொட்டுகிறோம். எவ்வாறு என்றால் தேனீக்கள் பூக்களில் உள்ள தேனை உறிஞ்சி அதை தனது கூட்டல் சேமிக்கும்போது மலத் துவாரம் வழியாக வரும் உணவுதான் தேன் என்று விபரம் தெரியாத பலர் கூறுகின்றனர். ஆனால் தற்போது ஆராய்ச்சியின் மூலம் தேன் அவ்வாறு தேனை சேமிக்கவில்லை.
அதற்கு இரண்டு வயிறு உண்டு. ஒரு வயிற்றின் மூலம் உணவுகளை உண்டு மலத்துவாரத்தின் மூலம் கழிவுகளை வெளியேற்றுகிறது. மற்றொரு வயிற்றில்தான் தேனை சேமித்து சில ரசாயன மாற்றங்களைச் செய்து வயிற்றின் கீழ் பகுதியில் வேறொரு துவாரத்தின் மூலம் தேனை சேமித்து வைக்கிறது என்று அறிவியல் அறிஞர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
நம்மில் பலபேர் தேன் என்பது தேனீயின் கழிவுப் பொருள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தோம். ஆனால் அவ்வாறு அல்ல கழிவுப் பொருள் என்பது வேறு. தேன் என்பது வேறு என்று அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்து உள்ளனர். இதைத்தான் 1400 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட திருக்குர்ஆனில் இறைவன்,
"மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளி-ருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!'' என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளி-ருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.
(திருக்குர்ஆன் 16:68,69)
வயிறுகளிலிருந்து என்ற வார்த்தையை சிந்தித்து பார்க்கவும். வயிறுகள் என்றாலே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட என்ற பொருள்படும். உடனே நீங்கள் "அப்போ தேனீக்களுக்கு பல வயிறுகள் உள்ளனவா?'' என்று கேட்கக் கூடாது. இப்போது இரண்டு வயிறுகள்தான் உள்ளன என்று கண்டறிந்துள்ளனர்.
திருக்குர்ஆனை சிந்தித்து வாசிப்பவர்களுக்கு இதைப் பற்றி நன்கு தெரியும். இருந்தபோதிலும் திருக்குர்ஆனைப் பற்றி தெரியாத சிலருக்கு இது புதிய தகவலாக இருக்கும் என்று நம்புகிறேன்.
Labels:
அறிவியல்
Subscribe to:
Posts (Atom)