Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Thursday 25 November, 2010

நபிகள் நாயகத்தின் விண்வெளிப் பயணம்

உண்மை ஏட்டுக்குப் பதிலடி
தொடர் 5
மனித குலத்தின் அறிவியல் பார்வை பவ்தீகப் பொருட்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு அப்பால் செல்ல முடியாது எனக் கண்டோம். உள்ளபடியே இது நமது அறிவியல் அறிவின் இயல்பாகும். நமது அறிவியல் அறிவு என்பது ஒரு எல்லைக்குட்பட்ட கலையாகும்.

Monday 15 November, 2010

நபிகள் நாயகத்தின் விண்வெளிப் பயணம்

உண்மை ஏட்டுக்குப் பதிலடி
தொடர் 4
மெய்யான விமர்சகரின் தகுதிகளுள் சில

பேனா பிடித்தவர்களெல்லாம் விமர்சக ராக முடியாது. அதற்கென்று சில தகுதிகள் உண்டு. ஆழமான விஷயஞானம், சரியான விஷயப்பார்வை மற்றும் ஆய்வுத் திறன் என்ற முப்பெரும் தகுதிகள் ஒரு விமர்சகருக்கு இன்றியமையாததாகும். உண்மை ஏட்டின் கட்டுரையில், இதில் எந்த ஒன்றாவது இருக்கிறதா? இவர்களின் ஆய்வுத்திறனும், விஷய ஞானமும் என்ன என்பதை முன் கட்டுரைகளில் கண்டோம்.

Friday 12 November, 2010

போலி பகுத்தறிவுவாதிகள் - தொடர் 9

எந்த ஒரு கொள்கையைப் பிரதானமாக ஒருவர் பிரச்சாரம் செய்கிறாரோ அந்தக் கொள்கையை அவர் உறுதியுடன் கடைப்பிடிக்க வேண்டும். அக்கொள்கை அனைவராலும் கடைப்பிடிக்க முடியாததாக இருந்தாலும் அக்கொள்கையை ஆதரிப்பவர்களால் மட்டுமாவது அது பின்பற்றப்பட வேண்டும். உலகில் எவராலும் கடைப்பிடிக்கப் பட முடியாத எந்தக் கொள்கையும் பகுத்தறிவு சார்ந்ததாக இருக்க முடியாது.

Wednesday 10 November, 2010

காமக் கொடூரனை போட்டுத் தள்ளிய காவல்துறை

இத... இத... இதைத்தான் நாம் எதிர்பார்த்தோம்!
நவம்பர் 9 அன்று தீபாவளி கொண்டாடிய கோவை மக்கள்!

கோவை சம்பவத்தைப் பற்றி பதிவை போட்டு மூன்று நாள்கள் கூட ஆகவில்லை. கோவை காவல்துறையினர் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

பொது மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை நாம் தெளிவாக புரிந்து வைத்துள்ளோம். இதுபோல் பள்ளி மாணவர்கள் செல்ல பேருந்து தேவை என்பதையும் கூறி இருந்தோம் அதுவும் உடனே நிறைவேற்றப்பட்டது. ஒருவேளை கருணாநிதி அவர்கள் நமது பிளாக் ஸ்பாட்டை பார்த்து விட்டாரோ என்னவோ?

Saturday 6 November, 2010

பள்ளிக் குழந்தைகள் கடத்தலில் நாம் படிக்க வேண்டிய பாடம்

கடந்த வாரம் தமிழகத்தில் அனைவரின் மனதிலும் மிகவும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது பள்ளிச் சிறுவர்கள் கடத்தி கொல் லப்பட்ட செய்தி.  கோவையைச் சேர்ந்த முஸ்கான், ரித்திக் என்ற சகோதர சகோதரிகளை வேன் டிரை வர் ஒருவர் கடத்தி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு காவல்துறை தன்னை தேடுவதை தெரிந்தவுடன் அந்த மாணவர்களை விட்டு விடாமல் கொன்றுபோட்டது

போலி பகுத்தறிவுவாதிகள் - தொடர் 8

திராவிடர் கழகத்தினரால் நடத்தப்படும் உண்மை எனும் ஏடு இஸ்லாத்தையும், உணர்வு இதழையும் வம்புக்கு இழுத்ததாலும், முஸ்­ம்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாலும் போலி­ பகுத்தறிவாளர்களின் மூட நம்பிக்கைகளை அம்பலப்படுத்தும் அவசியத்தை ஏற்படுத்தித் தந்தனர்.

மூடநம்பிக்கையின் மொத்த வடிவமாக போலி பகுத்தறிவுவாதிகள் திகழ்கிறார்கள் என்பதைக் கடந்த ஏழு வாரங்களாக நாம் விளக்கி வருகிறோம்.

நபிகள் நாயகத்தின் விண்வெளிப் பயணம்

உண்மை ஏட்டுக்குப் பதிலடி
தொடர் 3
இஸ்லாத்தின் ஆன்மீக நம்பிக் கையில் ஒன்றான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மிஹ்ராஜ் பயணத்தின் மீது மிஸ்டர் இனியவன் நடத்திய விமர்சனம் நபிமொழி கலையிலும் அறிவியல் கலையிலும் அவருடைய அறியாமையை வெளிப்படுத்துவ தாகவே அமைந்துள்ளது என்பதை முந்தைய கட்டுரைகளில் கண்டோம்.

Thursday 4 November, 2010

போலி பகுத்தறிவுவாதிகள் தொடர் 7

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு ஒன்றில் திருமணம் பற்றிக் கூறப்படும் மேலும் சில செய்திகளைப் பார்ப்போம்
திருமண முறையானது காட்டுமிராண்டிக் காலத்தில் அதாவது 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். அதை இன்றைக்கும் மனிதன் எதற்காக கடைப்பிடிக்க வேண்டும்? ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை

நபிகள் நாயகத்தின் விண்வெளிப் பயணம்

உண்மை ஏட்டுக்குப் பதிலடி
தொடர் 2
நாத்திகப் பகுத்தறிவின் பொய் முகம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட மிஹ்ராஜ் பயணம் தொடர்பாக நாத்திகப் பத்திரிகையில் வந்த விமர்சனத்திற்குரியபதிலை இத்தொடரில் நாம் பார்த்து வருகிறோம். முந்தைய தொடரில் விமர்சகரின் நபி மொழிக் கலையிலுள்ள புலமை மற்றும் அவர் பெற்றுள்ள ஆய்வுத்திறன் எந்த இலட்சணத்தில் இருந்தது என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டைக் கண்டோம். மிஹ்ராஜ் பயணத்தைப் பற்றிய அறிவியல் நிலை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.