Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Tuesday 26 October, 2010

சாமியார்களின் தொடரும் காம லீலைகள்

இறைவன் ஆணையும், பெண்ணையும் எதற்காகப் படைத்தான் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மனித அறிவிலிகள் சிலர் ஏற்படுத்திய தேவையில்லாத கலாச்சாரங்கள் மனித இனத்தையே அழிவுப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறது.


இறைவன் ஆணையும், பெண்ணையும் படைத்து இவ்வுலகத்தில் உள்ள அனைத்து சுக துக்கங்களையும் அனுபவிக்கவே உருவாக்கினான். ஆனால் இதில் சிலர் வேறுபட்டு என்னடா குடும்பம், குட்டின்னு போனா தேவையில்லாத தலைவலி என்று நினைத்து சன்னியாசியே சிறந்தது என்று நினைத்து அந்த சன்னியாசி கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களை சரியாக கடைபிடிக்க முடியாமல் பலவித அவமானங்களை சந்தித்து வருகின்றனர்.

சன்னியாசி என்றால் அனைத்தையும் துறக்க வேண்டும். எதையெதை துறக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் மனித இச்சைகளை எந்த விதத்திலும் துறக்க முடியாது. பசி, தூக்கம், உடல் உபாதைகளைப்போன்றே மனித இச்சைகளையும் துறக்க முடியாது.

நான் சாமியார், முற்றிலும் துறந்த முனிவர் என்று கூறுபவர் கூட சாதாரண மனிதனுக்கு உள்ள அனைத்து பலவீனமான பசி, தூக்கம், மலஜலம், இன்பம், துன்பம், செக்ஸ் கொண்டதாகவே வலம் வருகிறார். இது நம்மில் பலருக்குத் தெரிந்தும், சில அப்பாவிப் பெண்கள் இதுபோன்ற போலிச் சாமியார்களிடம் சிக்கி சீரழிந்து, மானத்தை இழந்து, உயிரையும் இழந்து விடுகின்றனர்.

சன்னியாசத்தைக் கடைபிடிப்பவர்களின் பெற்றோர்கள் இப்படி நினைத்திருந்தால் இவர் பிறந்திருப்பாரா?

சமீப காலமாக பாதிரியார்களின் அட்டூழியம் உலகம் முழுவதும் பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி வருகிறது. இதை கண்டிக்கும் விதமாக உலக கிறிஸ்துவர்களின் தலைவர் போப் பெனடிக்ட் சமீபத்தில் பேசினார். இந்தளவிற்கு பாதிரியார்களின் குறிப்பாக சன்னியாசிகளின் காம லீலைகள் அனுதினம் அறங்கேறி வருகின்றன.

தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த தோழுரைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் சுகன்யா (வயது 17) என்பவர் ஓமலூரைச் சேர்ந்த தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தார். இங்கு வேலை செய்யும் பாதிரியார் உள்பட ஆண்களில் சிலர் இந்த மாணவியை கற்பழித்து அங்கிருந்த கிணற்றில் வீசியுள்ளனர். இந்த சம்பவம் நடந்தது 2006ல். அப்போது அந்தப் பள்ளியில் மிகுந்த பிரச்சினை ஏற்பட்டு பள்ளியை அடித்து நொறுக்கினர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. இந்தப் பெண் கற்பழித்து கொல்லப்பட்டுள்ளாள் என்றும், அவளின் கருப்பையை சோதித்து பார்த்ததில் விந்தணு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக அந்தப் பள்ளியில் வேலை செய்த பாதிரியார், வேன் டிரைவர், தோட்டத் தொழிலாளி, கேட்டீன் முதலாளி, காவலாளி, ஆண் ஆசிரியர்கள் ஆகியோரின் விந்தணு மாதிரிகளை பரிசோதிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இதைப் படிக்கும்போது எப்படி இருக்கிறது. பெண் குழந்தைகளை இதுபோன்று விடுதியில் தங்க வைக்க வேண்டும் என்ற முடிவுக்கே வரக்கூடாது என்று தோன்றுகிறதல்லவா? ஆமாம் நீங்கள் நினைப்பது சரிதான். முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. பெண் பிள்ளைகளைப் பொறுத்தவரை நாம் விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்கவே கூடாது. 

அதுமட்டுமல்லாமல் பள்ளியில் சேர்க்கும்போது பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் சேர்க்க வேண்டும். இந்த கோ எஜுகேஷன் என்ற முறையெல்லாம் வேலைக்கே ஆகாது. ஆண்களுக்கு ஆண் ஆசிரியர்கள்தான் படிப்பை சொல்லிக் கொடுக்க வேண்டும். பெண்களுக்கு பெண் ஆசிரியர்கள்தான் படிப்பை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை வந்தாலெழிய இதுபோன்ற கற்பழிப்புகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும்.

படிப்பை சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களே இப்படி மாணவர்களைக் கற்பழிக்கும்போது எங்கே போவது. இப்படி நிறைய சம்பவங்களை நாம் காண்கிறோம். மேலும் சன்னியாசி கோலம் தரித்துள்ளவர்களைக் கண்டாலே தூரே ஓடி விட வேண்டும். சன்னியாசி என்பதெல்லாம் பொய். இந்தக் கோலம் ஊரை ஏமாற்றுவது. ஒரு சிலர் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். ஒரு கதையில் கூறுவார்கள் ஆனானப்பட்ட விசுவாமித்திரரே பெண்ணிற்கு மயங்கி இருக்கிறார் என்று... இது கதையென்றாலும் உண்மையில் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.

பாதிரியார்களில் சிலர் மாணவிகளையும், உடன் வேலை செய்யும் பெண்களையும் கற்பழிப்பது மட்டுமில்லாமல் மாணவர்களையும் ஒமோசெக்ஸ் போன்ற தவறான உறவும் கொள்கின்றனர்.

மிருகங்களில் ஆண் மிருகங்கள்தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் மனித உயிரினங்களில் பெண்கள்தான் அழகு. ஒரு ஆணை விரைவில் ஈர்ப்பதற்கான அத்தனை அம்சங்களும் பெண்களிடம் உண்டு. இதை பல பேர் புரிந்து கொள்வதில்லை. வெளிநாட்டு பிள்ளைகளைப்போல் மினி ஸ்கர்ட், தொடை தெரியுமளவிற்கு பாவாடை அணிந்து, இடுப்பு, வயிறு, மார்பகங்கள் தெரியுமளவிற்கு உடையணிந்து செல்வதால் ஆண்களால் ஈர்க்கப்படுகிறாள்.

இப்படி இருந்தால் எந்த ஆணிற்குத்தான் உணர்ச்சி பொங்காது. எந்தச் சாமியாராக இருந்தாலும் காம வெறி மேலோங்கவே செய்யும். எனவே பெண் பிள்ளைகளைக் கொண்டோர் தங்கள் பிள்ளைகளின் ஆடை, பழக்க வழக்கங்கள் போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இந்த ஆடை விஷயத்தில் புர்காவே சிறந்தது. மாற்று மதத்தில் உள்ள சகோதர, சகோதரிகள் உங்கள் பெண் குழந்தைக்கு புர்கா போட்டுப் பாருங்கள், அப்புறம் எந்த ஆணும் பார்க்க மாட்டான்.

இந்த மாதிரி காமுகர்களின் வலையில் விழுந்து எந்தப் பெண்ணும் அவமானமும், உயிரையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படாது.

எனவே சகோதர, சகோதரிகளே இஸ்லாத்தை நன்கு புரிந்து கொள்ளுங்கள், இஸ்லாத்திற்கு வாருங்கள். இஸ்லாம் சொல்லும் நெறிமுறைகளை கடைபிடியுங்கள். இஸ்லாம் அனைவருக்கும் நேர் வழியையே காட்டுகிறது. முகத்தை மறைக்காத புர்காவை அணியுங்கள். இதுபோன்ற போலி பாதிரியார், சாமியார், சன்னியாசிகளிடமிருந்து உங்களின் கற்பை பாதுகாத்துக் கொள்ளுங்கள். சன்னியாசிதனத்தை கை விடுங்கள். திருமணம் செய்து குடும்பத்துடன் வாழுங்கள். இதைத்தான் இஸ்லாமும் கூறுகிறது. இஸ்லாம் சன்னியாசத்தை எதிர்க்கிறது.

0 comments: