Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Friday 27 August, 2010

உங்கள் கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்

Free Memory Improve Master


நம் கணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் நம்முடைய கணினியின் Ram முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் கணினியில் ஒரே நேரத்தில் பல எண்ணற்ற வேலைகளை செய்து கொண்டு இருப்போம். ஒரு பக்கம் அலுவலக வேலை பார்ப்போம், இன்னொரு விண்டோவில் நம்முடைய வலைப்பதிவை பார்த்து கொண்டிருப்போம். அப்படி செய்து கொண்டு இருக்கும் போது நம் கணினியின் வேகம் மெமரி அதிகமாக உபயோக படுத்தப்படும். நம் கணினியும் வேகம் குறைந்து காணப்படும். இந்த குறைகளை தீர்க்கவே இந்த பதிவு.


இந்த மென்பொருளை நீங்கள் Install செய்து விட்டால் போதும் உங்கள் கணினியில் நீங்கள் எத்தனை ப்ரோக்ராம் ஒரே நேரத்தில் இயங்கினாலும் அதன் மெமரியை கட்டு படுத்தி உங்கள் கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும்.   இந்த மென்பொருளை நீங்கள் Download செய்ய உங்கள் கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.



டவுன் லோட் செய்தவுடன் நமக்கு வந்திருக்கும் free-mim என்ற Setup பைல் வந்திருக்கும். அதை இரண்டு முறை கிளிக் செய்து மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள். மென்பொருளை Install செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
 
இதில் நான் மேலே குறிப்பிட்டு காட்டி இருக்கும் இடத்தில் இந்த மென்பொருளின் வசதிகள் இருக்கும். இதில் ஐந்து  வகையான பிரிவுகள்  நமக்கு தெரியும்.
  • Information Overview
  • Memory Optimization
  • System Tuneup
  • Process Management
  • Configuration and Settings - என்ற பிரிவுகள் காணப்படும்.  
Information Overview : 
 இந்த பட்டனை கிளிக் செய்தவுடன் நமக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும். 


இந்த பிரிவில் நம் கணினி இப்பொழுது எவ்வளவு மெமரி உபயோக படுத்தபடுகிறது என்ற விவரம் இதில் நமக்கு தெரியும். இந்த விண்டோவில் உங்களுக்கு கீழே Good என்ற இது போல செய்தி வந்தால் உங்களுடைய கணினி போதிய அளவு மெமரி காலியாக உள்ளது என்று அர்த்தம். 

Memory Optimization 
இந்த பிரிவில் சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
  • இந்த விண்டோவில் Fast Free, Deep Compress என்ற இரு வசதிகள் இருக்கும் இவை இரண்டுமே நம் கணினியின் மெமரிய கட்டு படுத்த உதவும் வசதிகளாகும். 
  • இதில் உள்ள Fast Free என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழே ஒரு மெசேஜ் விண்டோ வரும். 
  • அதில் உங்களுடைய கணினி இதற்க்கு முன்னர் எவ்வளவு மெமரியை உபயோகித்தது. இப்பொழுது இந்த மென்பொருள் எவ்வளவு மெமரிய கட்டு படுத்தி உள்ளது என்ற விவரம் வரும்.   
  • இதை நீங்கள் ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டியதில்லை ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் அது தானாகவே இயங்கி நம் கணினியின் மெமரியை கட்டுபடுத்தும். 
  • இடைவெளி நேரத்தை மாற்ற விரும்பினால் அதற்கு கீழே உள்ள Auto Free every என்ற இடத்தில் உங்களுடைய நேரத்தை தேர்வு செய்து Save செய்து விடுங்கள். 
அடுத்து உள்ள மூன்று பிரிவுகளும் மென்பொருளின் அமைப்பை சரிசெய்வதர்க்கும், நம் கணினியில் எந்த பைல்கள் எவ்வளவு மெமரியை உபயோகித்து கொள்கிறது போன்ற தகவல்கள். கண்டிப்பாக உங்கள் கணினி முன்பை விட வேகமாக இயலும்.


Saturday 21 August, 2010

இளைய தலைமுறையே உஷார்



இன்டர்நெட் காதல்

பன்னெடுங் காலமாக உலக மக்கள் அனைவரும் தங்களின் தகவல்களை கடிதம் மூலம் பரிமாறிக் கொண்டனர். கடிதத்தின் மூலம் தங்களின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்து, சுக துக்கங்கள், நலம் விசாரிப்பது போன்ற செய்திகளை பறிமாறிக் கொண்டனர். பின்னர் கணினி கண்டு பிடிக்கப்பட்டதும் இந்நிலை மாறியது.

கணினி கண்டு பிடித்த பிறகு நவீன யுகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் இன்டர்நெட், இமெயில் போன்ற வளர்ச்சியும் ஏற்பட்டது. இமெயில் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதுடன் அலுவலகப் பணிகளுக்கும் இது பெரிதும் உதவியது. 

அதன் பின்னர் யாஹு, கூகுள், ஸ்கைப் போன்ற சாட்டிங் புரோகிராம்களும் தலையெடுக்க ஆரம்பித்தன. முதன் முதல் யாஹு சாட்டிங்க வந்தவுடன் மக்கள் மத்தியில் சக்கைபோடு போட்டது. இந்த யாஹு சாட்டிங்கில் ஒருவருக்கொருவர் உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக் கொண்டனர். 
வெளிநாட்டில் வசிக்கும் தங்களின் உறவினர்களிடம் கான்பரன்சிங் மூலம் அதாவது வெப் கேமரா மூலம் முகத்தை முகம் பார்த்து பேசும் வசதியால் இதை பயன்படுத்துவோர் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

தொலைபேசியில் பேசி காசை கரியாக்குவதை விட பலமணி நேரம் முகத்தை முகம் பார்த்து பேசினாலும் இந்த சாட்டிங் மூலம் குறைந்த அளவே பணம் செலவானது. இதனால் மக்களிடையே இந்த சாட்டிங் புரோகிராம்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

ஆனால் சில சமூக விரோதிகள் தங்களை யார் என்றும், தங்களின் ஊர், முகவரி எது என்றும் உண்மையான தகவல்களைச் சொல்லாமல் பொய்யான தகவல்களைப் பறிமாறிக் கொண்டனர். (எதற்காக என்றால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களே தங்களிடம் பழகும்போது தவறாக நடந்து கொள்வார்களோ என்ற அச்சத்தில் இருக்கும்போது, இந்த சாட்டிங் மூலம் ஊர் பேர், முகம் தெரியாத யாரே ஒருவரிடம் தங்களின் உண்மையான முகவரியைத் தந்தால் அதன் மூலம் பிரச்சினை ஏற்படும் என்று பயந்ததால் உண்மையான முகவரியைக் கூறபயந்தனர்.) இதைப் பற்றி கவலைப் படாத ஒருசிலர் மட்டுமே தங்களின் உண்மையான முகவரியை கூறினர். 

இந்த சாட்டிங்கில் போய் பார்த்தால்தான் தெரியும். அவ்வளவும் அசிங்கம். கெட்ட கெட்ட வார்த்தைகளையும், தகாத வார்த்தைகளையும் உபயோகித்து பப்ளிக் சாட்டிங் எனப்படும் இடத்தில் மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டு இதை ஒரு பொழுதுபோக்காகவே சிலர் செய்து வருகின்றனர்.
நவீன யுகம் வளர வளர பாதுகாப்பு என்பதற்கே பங்கம் வரும் வகையில் பல புதிய புதிய பிரச்சினைகள் இதன் மூலம் வளருகின்றன.

அப்படி இருந்தும் முகம், ஊர் பேர் தெரியாத, அறிமுகம் அல்லாத சிலரும் (ஆண்கள்) தங்களை பெண்கள் என்றும் 18 வயதுதான் ஆகிறது என்றும் ஆண்களையும், பெண்களையும் ஏமாற்றி ஒரு பொழுது போக்குக்காக இப்படி செய்து வந்தனர். இதன் மூலம் பல இன்னல்களை அப்பாவி ஆண்களும், பெண்களும் அனுபவித்தனர். 

அறிமுகமில்லாத நபர்களுடனும், புதிதாக ஏற்படுத்திக் கொள்ளும் நண்பர்களுடனும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரிந்தும் கூட பின்னர் அதை மறந்து இப்படி பல இன்னல்களில் மாட்டிக் கொண்டு வேதனைப்படுகின்றனர்.
சமீப காலமாக சாட்டிங் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு நண்பர்களாகவும், உறவினர்களாகவும், கணவன் மனைவிகளாகவும் தங்களின் உறவுகளை பலப்படுத்தி வருகின்றனர்.

இப்பொழுது விஷயத்திற்கு வருவோம்...
சமீபத்தில் ஒரு வருந்தத்தக்க சம்பவம் ஒன்று நடந்தது. அது என்னவென்றால் திருச்சியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் நகைக் கடை நடத்தி வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் ஒருவரைக் காத-த்து பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார்.

இதனால் மனமுடைந்த அந்தப் பெண்ணின் தந்தை இந்தக் காதலுக்கு இளைய மகள் சூர்யாவும் உடந்தை என்று எண்ணியதால் இனிமேல் காதல் கல்யாணம் என்று நீ கூறினாலும் அதற்கு அனுமதியில்லை என்று இளைய மகளிடம் கூறி விட்டார்.

நாளடைவில் இந்த சம்பவத்தை தனது தந்தை மறந்திருப்பார் என்று இளைய மகளும் ஒருவரைக் காத-த்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை உங்களுடைய சங்காத்தமே வேண்டாம்; ஆளை விடுங்க என்று தனியாக போய் விட்டார்.

முதல் படம் : சமையல் அறையில் கை நரம்பை அறுத்துக் கொண்டு படுத்திருக்கும் சூர்யா.
2ம் படம் : அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர்

தாயுடன் தனியாக வசித்து வந்த சூர்யா தனது காதலை வளர்த்து வந்தார். இதற்கு அவரின் அம்மாவும் உடந்தையாக இருந்தார். அந்தக் காதலன் வேறு யாருமில்லை. இன்டர்நெட் சாட்டிங் மூலமாக வந்த காதலன்தான் அவன். 
சாட்டிங்கில் அறிமுகமான நபர் முத-ல் யார் என்றே தெரியாமல் இருந்த சூர்யாவுக்கு பின்னர் அவரின் காதல் தனது மனதை மாற்றியது. இதனால் இவர்களின் காதல் நாளுக்கு நாள் வளர்ந்தது. இப்படி இவர்களின் காதல் கதை போய்க் கொண்டிருக்கும்போது ஒருநாள் காதலன் சாட்டிங்கில் வருவதையே நிறுத்திக் கொண்டான். 

இவளும் பலமுறை முயற்சி செய்தும் ஒருமுறை சாட்டிங்கில் வந்த காதலன், நமது காதலை எனது பெற்றோர் ஏற்கவில்லை. எனக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்கப் போகிறார்கள். அதனால் என்னை மறந்து விடு என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்துக் கொண்டான்.

இதனால் மனமுடைந்த சூர்யா கத்தியால் தனது கை நரம்புகளை வெட்டிக் கொண்டது மட்டுமில்லாமல் தனது அம்மாவிடமும் இதைப் பற்றிக் கூறியதும் அவரும் தனது கை நரம்புகளை வெட்டிக் கொண்டார்.

ரத்தம் வழிந்தோடிய பிறகும் இறக்காததால் வீட்டில் உள்ள கேஸ் இணைப்பை கழற்றி விட்டு சமையல் அறை முழுவதும் கேஸை கசிய விட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தீக்குச்சியை பற்றவைக்கக் கூட அவரிடம் தெம்பு இல்லை. 

அப்பொழுது அவர் இருக்கும் வீட்டிற்கு வந்த ஒருவர் கா-ங் பெல்லை அழுத்த ஸ்சுட்சில் இருந்து பொறி பறக்கவே வீடு முழுவதும் பரவியிருந்த கேஸ் உடனே பற்றிக் கொண்டது. பெருத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியதால் அருகில் உள்ளவர்கள் வந்து தீயை அணைத்தனர். மேலும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். கருகிய நிலையில் தாய், மகளையும் மீட்டனர். 

இப்பொழுது இருவருமே மருத்துவமனையில் சீரியஸாக உள்ளனர்.
இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அறிமுகமில்லாதவர்களிடம், புதிதாக நண்பர்களாக ஆகுபவர்களிடமும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

எந்த ஒரு கஷ்டத்திற்கும் தற்கொலை என்ற முயற்சியைக் கை விட வேண்டும். 
பிறப்பது ஒருமுறைதான் என்றாலும் பிறப்பின் மகத்துவத்தை அறிந்து கொண்டு இதுபோன்ற தவறான காரியங்களில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதிகமாக உணர்ச்சி வசப்படுவதை தவிர்த்தாலே இதுபோன்ற இன்னல்களி-ருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம்.

- ஆர். மன்மதன்

Sunday 15 August, 2010

நாணயங்களைக் காணவில்லை

பணம் என்றால் பிணம் கூட வாயைப் பிளக்கும்' என்பது முதுமொழி. இன்றைய உலகில் பணம் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக ஆகிப்போய் உள்ளது.

பணம் இல்லாதவன் பிணம்', பணம் பத்தும் செய்யும்' என்பதுபோல இன்றைய யுகம் ஆகிவிட்டதை நாம் பார்க்கிறோம். பண்டைய காலத்தில் மனிதன் வணிகம் செய்யும்போது ஒரு பொருளைக் கொடுத்து மற்றொரு பொருளை பெற்றுள் கொள்வதே வழக்கமாக இருந்தது. அப்போதெல்லாம் பணம் என்ற ஒன்றை அவர்கள் கண்டறியவில்லை. இதனால் பல பிரச்சினைகளை அவர்கள் சந்தித்து வந்தனர். இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு வராதா என அவர்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர்.

அரிய வகை நாணயங்கள்

இதற்கு ஒரு வடிகாலாக மனிதன் நாணயங்களை பயன்படுத்தத் தொடங்கினான். நாணயங்கள் பயன்படுத்துவதின் மூலம் ஒரு பொருளை கொடுத்து மற்றொரு பொருள் வாங்குவதின் மூலம் ஏற்படும் சிரமம் வெகுவாகக் குறைந்தது. ஆதி காலத்தில் மனிதர்கள் நாணயங்களை தங்கத்தாலும், செம்புகளாலும், வெள்ளியாலும் தயாரித்து பயன்படுத்தி வந்தனர். நவீன யுகத்தில் அதை மாற்றி ரூபாய் நோட்டுகளாக காகிதத்தில் பயன்படுத்தத் தொடங்கினர். நமது நாட்டில் ஒவ்வொரு வருடமும் ரூபாய் நோட்டுகளையும், காசுகளையும் மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. நூறு வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட நாணயங்கள் மிகவும் கலைநயமிக்கதாகவும், பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் இருந்தது. அப்போதெல்லாம் நாணயங்கள் வெளியிடப்பட்டதும் மக்களின் பயன்பாட்டிற்கு வந்து விடும்.
புதிதாக வெளிவந்துள்ள 10 ரூபாய் 

இந்தியாவில் நாணயங்கள் கொல்கத்தா மற்றும் மும்பை போன்ற நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. இதில் Proof Coins மற்றும் Uncirculated Coins என்று இரு வகையான நாணயங்கள் உள்ளன. இந்த இரண்டு வகையான நாணயங்கள்  பொழுதுபோக்குக்காக சேகரிப்பதற்கு மட்டுமே தவிர வர்த்தகத்துக்கு உபயோகப்படாது. 1964ல்தான் முதல் கமோமரேட்டிவ் நாணயங்கள் அச்சடிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் சிறப்பு நாணயங்கள் அச்சிடப்படும்போது அதைப் பற்றிய விளம்பரங்கள் நாளிதழ்களில் வெளியாகும்.

நாணயத்தை வெளியிடும் பிரனாப் முகர்ஜி

 இப்போது அந்நிலை மாறி விட்டது. புதிதாக நாணயம் வெளியிட்டு இரண்டு வருடங்கள் கழித்தும் சில நாணயங்கள் பெரும்பாலான மக்களிடம் கிடைப்பதில்லை. அந்த வகையில் சென்ற வருடம் 10 ரூபாய் நாணயம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்தும் மக்களின் பயன்பாட்டிற்கு அந்த நாணயம் வரவில்லை. 

ரூபாய்க்கான குறியீட்டை கண்டுபிடித்த தமிழகத்தைச் சேர்ந்த உதய் குமார்

ஏனென்றால் அந்த நாணயம் கலைநயமிக்கதாகவும், செம்பு மற்றும் தாமிரத்தால் ஆனதாகவும் இந்ததால் சில கள்ளப் பேர்வழிகள் அதை பதுக்கத் தொடங்கினர். இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் அந்த நாணயம் எப்படி உள்ளது என்பதைக் கூட பார்க்க முடியாமல் போனது. நாணயங்களைப் பதுக்குவது சட்டப்படி குற்றமாகும். இதற்கு இரண்டு வருடங்கள் கூட சிறைத் தண்டனை  கூட கிடைக்கும். சிலர் நாணயங்களை சேகரிக்கிறோம் என்ற பெயரில் புதிதாக வெளியிடப்பட்ட நன்கு கலைநயமிக்க நாணயங்களை பதுக்கி வைத்துள்ளனர். இதுபோன்ற செயல்களால் நாட்டில் அதிகப்படியான புதிதாக வெளியிடப்பட்ட நாணயங்கள் உலவி வருவது குறைந்து வருகிறது.

பல்வேறு வகையான ஐந்து ரூபாய் நாணயங்கள்

நாணயங்களை சேமித்து வைப்பதற்கென்றே காயின் செசைட்டி என்ற அமைப்பு உள்ளது. இதனை தொடர்பு கொண்டால் எப்போதெல்லாம் புதிதாக நாணயங்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த அமைப்பு மூலம் நாணயங்களைப் பெற்று சேகரித்து வைத்துக் கொள்ளலாம். நாணயங்கள் சேகரிப்பது பொழுதுபோக்காகவும், பொது அறிவு வளர்ச்சிக்காவும் மட்டுமில்லாமல் சிறந்த முதலீடாகவும் சிலர் கருதுகின்றனர்.


ஏனென்றால் இந்த வகை அரிய நாணயங்கள் பிற்காலத்தில் ஏலத்தில் விடும்போது அந்த நாணயத்தின் மதிப்பை விட பன்மடங்கு விலை வைத்து அந்த வகை நாணயங்களை ஏலத்தில் விடுகின்றனர். இதன் மூலம் நல்ல வருவாயையும் அவர்களுக்கு கிடைத்து விடுகிறது. குறிப்பாக இப்போது வெளியாகி உள்ள ரூ. 10 நாணயம் பிற்காலத்தில் அதாவது 5 வருடங்கள் கழித்து ஏலத்தில் விடும்போது அதன் மதிப்பு ரூ. 5,000 என்றும் ரூ. 10,000ம் என்று ஆகி விடும். இதை கருத்தில் கொண்டுதான் நாணயம் சேகரிப்போர் சிலர் இந்த கலை நயமிக்க 10 ரூபாய் நாணயத்தை பதுக்கி வைத்திருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 

ஓட்டை காலணா

(நீங்கள் நாணயத்தை சேமித்து வைக்கிறேன் என்று இதுபோன்ற செயல் இறங்கி விட மாட்டீர்கள் என்று கருதுகிறேன். அப்படி சேமித்து வைப்பதாக இருந்தால் ஒரே வகையான நாணயமாக சேமித்து வைக்காமல் வேவ்வோறு வகையான நாணயமாக சேமித்து வைக்கவும்). 

எது எப்படியோ மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு வராத வகையில் நாணயம் சேகரிப்போர் சிறந்த முறையில் இவற்றைச் சேகரித்தால் (அதாவது ஒருவர் ஒரு நாணயத்தை சேகரிப்பது) மக்களின் பயன்பாட்டிற்கு வெகு விரைவில் கிடைத்து விடும். நான் கூட 10 ரூபாய் நாணயத்தை பார்த்ததே இல்லை. நெட்டில்தான் பார்த்திருக்கிறேன்.
- ஆர். மன்மதன்

Thursday 12 August, 2010

கதையல்ல நிஜம்


தாயினாலேயே நிர்வாணப்படுத்தப்பட்ட மகள்.
விஜய் டிவியில் பரபரப்புப் பேட்டி. கலத்தில் தவ்ஹீத் ஜமாத்.

  தொகுப்பு  Rasmin  M.I.Sc

 வீடியோ மற்றும் பின்னனித் தகவல்கள்.

கோவை மாவட்டம் குனியமுத்தூர் என்ற ஊரில் ஒரு சகோதரிக்கு ஏற்பட்ட கொடுமை ஊரையே பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.

அதாவது கடந்த 9.08.2010 அன்று விஜய் டிவியின் நிஜம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சகோதரி தனக்கு நடந்த அவலத்தை அந்த நிகழ்சியில் தெரிவித்தது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

ஆரச்சாமி என்ற ஒருவர் தன்னை அடைய முயற்சிப்பதாகவும் அவர் தன்னை துன்புருத்துவதாகவும் அந்த நிகழ்சியில் தெளிவாக குறிப்பிட்டதுடன் இதற்கு தனது தாயும் தந்தையும் கூட உடந்தை என்பதை பகிரங்கமாக தெரிவித்தார்.

நடந்தது என்ன?

விஜய் டிவியின் நிகழ்சிக்கு முன் இந்த சகோதரிக்கு நடந்தது என்ன என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

அதாவது கடந்த 19.02.2010 அன்று கோவை குனியமுத்தூர்  போலிஸ் நிலையத்தில் சபிய்யா பானு என்ற சகோதரி தனது தாய் மாமனுடன் சென்று ஒரு வழக்குப் பதிவு செய்தார்.

ஆரச்சாமி என்ற ஒருவர் தன்னை மானபங்கப் படுத்த முயல்வதாகவும்.அதற்கு தனது தாயும் தந்தையும் உடந்தையாக இருப்பதாகவும் அவர்கள் தன்தை ஆரச்சாமிக்கு திருமணம் முடித்துக் கொடுக்க முயல்வதாகவும் இதனைத் தடுத்து நிருத்த காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் அவர் புகார் பதிவு செய்தார்.

அததைத் தொடர்ந்து கோட்டின் மூலம் ஆரச்சாமி ஜாமினில் வெளிவந்து விடுகிறான் அந்த வழக்கு இன்னும் நிழுவையில் உள்ளது.

அந்தச் சகோதரியின் தாய் மாமா பாட்டி அனைவரும் இவரை அவரின் வீட்டிட்கு அனுப்ப வேண்டாம்.இந்தப் பெண்ணை அங்கு அனுப்பினால் அவர்கள் மீண்டும் அவருக்கு துன்பம் கொடுப்பார்கள் என்று போலிஸில் சொல்லியும் ஏதோ ஒரு காரணத்தினால் அந்தச் சகோதரி மீண்டும் அவருடைய பெற்றோருடனே அனுப்பப் பட்டார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் பழைய பிரச்சினைகள் தலை தூக்குகிறது.

மீண்டும் 02.07.2010 அன்று வெள்ளிக்கிழமை ஸ்கூல் சென்ற அந்தச் சகோதரி அங்கிருந்து திருப்பூரிலிருக்கும் தனது தாய் மாமாவின் வீட்டிட்கு செல்கிறாள்.

அந்த மாமா குறிப்பிட்ட சகோதரியை அழைத்துக் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோவை மாவட்டத்தை அனுகினார்.

பிரச்சினையை கையிலெடுத்தது தவ்ஹீத் ஜமாத்

07.07.2010 அன்று இந்தச் சகோதரிக்கு நேர்ந்த கொடுமையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் அவருடைய தாய் மாமா மூலமாக தெரியப் படுத்துகிறார்.

பிரச்சினையை கையில் எடுத்த தவ்ஹீத் ஜமாத் உடனே கலத்தில் குதித்தது.

07.07.2010 அன்று தவ்ஹீத் ஜமாத் கோவை மாவட்;ட நிர்வாகம் கமிஷ்னரை சந்திக்கிறார்கள்.

குறிப்பிட்ட சகோதரிக்கு நடந்த கொடுமைகள் கமிஷ்னரிடம் தெளிவாக விளக்கப் பட்டது.அதனைத் தொடர்ந்து கமிஷ்னரின் வேண்டுதலுக்கிணங்க அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அந்தச் சகோதரியுடன் மாவட்ட நிர்வாகம் சென்றது.

மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டவுடன் 09.07.2010 அன்று மீண்டும் அந்தச் சகோதரியை அழைத்துக் கொண்டு விசாரனைக்கு வரும் படி அனைத்துக் மகளிர் காவல் நிலையம் தவ்ஹீத் ஜமாத்தை கேட்டுக் கொண்டது.
அதுவரை தவ்ஹீத் ஜமாத்தின் பாதுகாப்பில் அந்தச் சகோதரியை வைத்துக் கொள்வதாகவும் முடிவு செய்யப் பட்டது.

09.07.2010 அன்று மகளிர் காவல் நிலையத்தில் வைத்து குறிப்பிட்ட சகோதரியின் தாயிடத்தில் விசாரனை செய்யப் பட்டபோது தாய் தனது மகள் என்று கூடப் பார்க்காமல் காரசாரமாக அந்தச் சகோதரியை திட்டுகிறார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் மகளிர் காவல் நிலையம் 12.07.2010 அன்று விசாரனைக்கு வரும்படி சொல்ல அழைத்து சென்றது தவ்ஹீத் ஜமாத் நிர்வாகம்.

மீண்டும் விசாரனையின் போது தனது மகளை காரசாரமாக வாய்க்கு வந்தபடி திட்டுகிறார் அந்தப் பெண்ணின் தாய்.

அதனைத் தொடர்ந்து மகளிர் காவல் நிலையத்தின் உத்தரவின் பேரில் தவ்ஹீத் ஜமாத்தின்; பாதுகாப்பில் குறிப்பிட்ட சகோதரி ஒப்படைக்கப் படுகிறார்.

தந்தையின் தீக்குழிப்பு நாடகம்.

19.07.2010 அன்று சாதிக் பாஷா(இவர் இந்துவாக இருந்து இஸ்லாத்தில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.) என்ற அந்தச் சகோதரியின் தந்தை கலக்டர் அலுவலகத்தின் முன் தீக்குழிக்கச் முயன்றார்.

அதனைத் தொடர்ந்து மகளிர் காவல் நிலைய வேண்டுதலின்படி நீதிபதி விசாரனைக்கு அந்தச் சகோதரி அழைத்துச் செல்லப் படுகிறார்.

கிட்டத் தட்ட 3 மணிநேரங்கள் விசாரனை நடத்தப் பட்ட பின் அந்த சகோதரியின் தாய் மற்றும் தந்தையை கடுமையாக கண்டித்து அதன் பின்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கோவை மாவட்ட கட்டுப் பாட்டில் அந்தச் சகோதரி விடப்பட்டார்.

விஜய் டிவி நிகழ்ச்சி.

நீதிபதி விசாரனையில் தான் குற்றவாளி என்று நிரூபிக்கப் பட்டதை மறைப்பதற்காக விஜய் டிவியின் கதையல்ல நிஜம் நிகழ்ச்சிக்கு அந்தப் பெண்ணின் தாய் தெரியப் படுத்தினார் அதனைத் தொடர்ந்து விஜய் டிவி நிர்வாகம் தவ்ஹீத் ஜமாத்தை கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்தச் சகோதரியை குறிப்பிட்ட நிகழ்சியில் கலந்து கொள்ள அழைத்துச் சென்றது தவ்ஹீத் ஜமாத்.
 
கதையல்ல நிஜம்.

குறிப்பிட்ட சகோதரி பொய் சொல்கிறார் என்று செய்தி பரப்பிய தாய் தந்தை உற்பட ஆரச்சாமி என்ற காமுகனையும் விஜய் டிவி நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தது.

அந்த நிகழ்ச்சியில் சகோதரி அவர்கள் தான் இந்த ஆரச்சாமியால் பாதிக்கப் பட்ட முறையை தெளிவாக விளக்கினார்.

நிகழ்சியை நடத்திய லக்ஷ்மி என்ற பெண்ணே இந்தச் சகோதரியின் செய்தியைக் கேட்டு ஆச்சரியப் பட்டார்.

சகோதரி ஆரச்சாமியைப் பற்றி சொன்ன சில செய்திகள்.

இவன் என்னுடைய தாயுடன் தவறான தொடர்பை வைத்திருக்கிறான்.

இது என் தந்தைக்கும் தெரியும்.

இவன் என்னை அடைவதற்கு பல முறை முயன்றான்.

என்னுடன் யார் பேசினாலும் அவர்களை கடுமையாக தாக்குகிறான்.

என்னை யாருடனும் பேசக்கூட விடுவதில்லை.

நான் வெளியில் சென்று விடாமல் இருக்க என் தாயும் இவனும் சேர்ந்து என்னை நிர்வாணப் படுத்தினார்கள்(சொல்லும் போதே விம்முகிறார்)

எனது தாய் தந்தையின் கண்முன்னே என்னை கடுமையாக தாக்குவான்.

இருவரும் அதனைப் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள்

இவனுக்கும் எனக்கும் எந்தத் உறவு முறைச் சொந்தமும் இல்லை ஆனாலும் இவன் என்மேல் என் தந்தையை விட அதிகமான அதிகாரம் செலுத்துகிறான்.

இப்படி பல செய்திகளை ஆரச்சாமி என்ற அந்த ஆசாமியைப் பற்றி சகோதரி எடுத்து வைத்தார்.

லக்ஷ்மியின் கேள்வியும் சகோதரியின் பதிலும்.

நிகழ்சியை நடத்திய லக்ஷ்மி அவர்கள் இப்படியெல்லாம் உன்னை இவன் துன்புருத்தக் காரணம் என்ன என்று கேட்டார்.

அதற்கு அந்தச் சகோதரி நான் இப்படி இவனிடமும் என் தாய் தந்தையிடமும் கஷ்டப் பட காரணம் என்னுடைய அழகு இதன் காரணமாகத் தான் இந்தக் காமுகன் என்னை இப்படி கஷ்டப் படுத்துகிறான் என்று அந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

ஆரச்சாமியும் லக்ஷ்மியின் எச்சரிக்கையும்.

நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் லக்ஷ்மி அந்த நிகழ்சியில் ஆரச்சாரமியை விசாரனைக்கு உட்படுத்தினார்.

அந்த விசாரனையில் நீங்கள் ஏன் இந்தப் பெண்னை இப்படி கஷ்டப் படுத்துகிறீர்கள் உங்களுக்கு இவர் என்ன உறவு இவருக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை கேட்க.

அரண்டு போன ஆரச்சாமி தனக்கும் குறிப்பிட்ட அந்த சகோதரிக்கும் எந்த ஒரு உறவும் இல்லை.

அவருடைய தாயாருடன் நான் வியாபாரம் செய்கிறேன்.அதனால் இந்தப் பெண்ணையும் எனக்குத் தெரியும் வீட்டிட்கு போய் வருவேன்.

அவருடைய நல்லது கெட்டதுகளை பார்த்துக் கொள்வேன்  என்று சொன்னார்.

அதற்கு பின் பேசிய லக்ஷ்மி இவர் சொல்வதில் என்ன உண்மை இருக்கிறது என்று சகோதரியிடம் கேட்க இவருக்கும் எனது தாய்க்கும் வேறுவிதமாக தொடர்பு இருக்கிறது.

அத்தோடு இவர் என்னையும் அடைய முயற்சிக்கிறார் என்பதை அந்தக் காமுகனுக்கு முன் விஜய் டிவியில் தெளிவாக தெரிவித்தார்.

இதனை மறுத்த ஆரச்சாமிக்கு பதில் கூறிய லக்ஷ்மி எந்தப் பெண்ணும் இல்லாத ஒன்றை தன்மேல் சொல்லி தனது எதிர்காலத்தை கெடுத்துக் கொள்ள மாட்டார் நீங்கள் இப்படி நடந்ததால் தான் இவர் இப்படி குறிப்பிடுகிறார் என்பதை விளக்கி சொல்ல தான் அப்படி நடந்தேன் என்பதற்கு சாட்சியாக ஆரச்சாமி அமைதியாக இருந்தார்.

வீடியோவைப் பார்க்க இங்கு க்லிக் செய்யவும்.

விசாரிக்கப் பட்ட தாயும் தந்தையும்.

இருதியாக தாயையும் தந்தையையும் விசாரித்தார் லக்ஷ்மி அப்போது தாய் மாறி மாறி பேசியது அவர் ஒரு குற்றவாளிதான் என்பதையும் தந்த ஒரு கையாலாகாத ஆரச்சாமியின் பணத்திற்கு அடிமையான ஒருவன் என்பதும் தெளிவாக விளங்கியது.

தீக்குழிப்பு என்று கூறியதெல்லாம் நாடகம் என்பதும் அந்த வீடியோவில் நிரூபிக்கப் பட்டது.

அதே போல் இனிமேல் எந்தவிதமான கஷ்டமும் இந்தப் பெண்ணுக்கு கொடுக்கக் கூடாது என்றும் அதில் தெரிவிக்கப் பட்டது.

தந்தையை எச்சரித்த லக்ஷ்மி.

சம்பந்தமே இல்லாத ஒருவன் உங்கள் பிள்ளையை அடித்து துன்புருத்தியுள்ளான் இதையெல்லாம் பார்த்து நீங்கள் சும்மா இருந்துள்ளீர்கள்.

இனிமேலாவது ஒரு ஆண்மகனைப் போல் நடந்து கொள்ளுங்கள் என கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.

தகவல் :

சகோதரர் நவ்ஷாத்
செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோவை மாவட்டம்.
Ph : 00919150125002

பெற்ற தாயினாலேயே
நிர்வாணப்படுத்தப்பட்ட மகள்.
சத்திய இஸ்லாத்தை ஏற்ற பின் விஜய் டிவி நிஜம் நிகழ்ச்சியில் அளித்த துனிச்சலான பேட்டி


வீடியோ மற்றும் பின்னணி தகவல்களுடன்
 இன்ஷா அல்லாஹ்.  விரைவில்........

islamicdvd.blogspot.com


விண்ணில் உயிரினங்கள் வாழ்கின்றனவா?
(ஓர் ஆன்மீக அறிவியல் கண்ணோட்டம்)
தொகுப்பு ரஸ்மின் எம்.ஐ.எஸ்.ஸி (இலங்கை)
உலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று நாம் வாழும் காலம் வரை இவ்வுலகில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

வளர்சிகள் அழிவுகள் புதிய தோற்றங்கள் என்று நாளுக்கு நாள் இந்த உலகில் மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.

ஆனால் அன்றிலிருந்து இன்று வரை இந்த உலகின் வின்வெளி பற்றிய ஆய்வுகளும் அபூர்வங்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

வின்வெளியின் அமைப்பு அதன் செயற்பாடு பற்றியெல்லாம் பல ஆய்வுகளை அன்று தொடக்கம் இன்று வரை மனிதன் செய்தாலும் இதுவரை இந்த வின்வெளி ஒரு புரியாத புதிராகவே உள்ளது.

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கீங் கலிலியோ கலிலி போன்றவர்கள் தொடக்கம் இன்றுள்ள விஞ்ஞானிகள் வரை அனைவரையும் இந்த வின்வெளி பெரும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துக் கொண்டுதான் இருக்கிறது.இனி விஷயத்திற்கு வருவோம்.

வேற்றுக்கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா? அப்படி வாழ்ந்தால் அவற்றின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும்?அவைகளும் மனிதர்களைப் போன்றனவா?அல்லது வித்தியாச குணங்கள் கொண்டவையா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் ஒவ்வொருவருடைய மனதிலும் எழுந்து கொண்டுதான் இருக்கிறது.ஆனால் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்க்குத்தான் யார் இருக்கிறார்கள் என்று பலர் நினைக்கிறார்கள்.

முதலில் வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பாக சொல்லப் படும் கதைகள் என்ன? கற்பனைகள் என்ன?விஞ்ஞானத் தகவல்கள் என்ன? என்பவற்றைப் பற்றி நாம் தெளிவாக அறிந்து கொண்டால் இதன் உண்மை நிலையை புரிந்து கொள்வது மிக எழிதானதாகி விடும்.


பூமியில் இறங்குவதாக சித்தரிக்கப்பட்ட பறக்கும் தட்டு (வரைபடம்)


 வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பான கதைகள்.

இது தொடர்பாக நிறையக் கதைகள் இருந்தாலும் மக்கள் பெறுமளவுக்கு நம்பக் கூடிய  கிட்டத்தட்ட 5அல்லது 6 கதைகள் உள்ளன.அதில் முதலாவது: 1254ம் ஆண்டு இங்கிலாந்தின் எல்பன்ஸ் தேவாலயத்திற்கு மேலால் புதுமையான பறக்கும் பொருள் ஒன்று காணப்பட்டதாகவும்,அது வேற்றுக்கிரக வாசிகள் வருகை தரக்கூடிய பறக்கும் தட்டாக இருக்கலாம் எனவும் நம்பப் படுகிறது.


Aliens எனப்படும் வேற்று கிரகவாசிகள் (கிராபிக்ஸ் படம்)

அதே போல் 1741ம் ஆண்டு இங்கிலாந்தின் ஒரு பகுதிக்கு மேலாக வட்ட வடிவத்தை விட சற்று சரிவான மர்மப் பொருள் ஒன்று பறந்து வின்னில் மறைந்ததாக போசெப் பிரபு என்பவர் கூறியிருந்தார்.அதுபோன்றே மின்குமிழ் வடிவத்தில் பறக்கும் பொருள் ஒன்று சுவிற்ச்சர்லாந்திற்கு மேலால் பறந்ததாக 1762ம் ஆண்டு கூறப்பட்டது.பிரான்சின் எம்பிரம் பகுதிக்கு மேலாக வட்ட வடிவில் பறக்கும் தட்டுக்கள் பல பறந்ததாக 1820ம் ஆண்டு தெரிவிக்கப் பட்டது.

Aliens எனப்படும் வேற்று கிரகவாசி (கிராபிக்ஸ் படம்)

1947ம் ஆண்டு பறக்கும் தட்டொன்ரைப் பார்த்ததாக விமான ஓட்டி ஒருவர் கூறிய தகவலும் இருக்கிறது.தாம் பறக்கும் தட்டுக்களால் கடத்திச் செல்லப் பட்டதாக 1971ம் ஆண்டு இரண்டு அமெரிக்கர்கள் கூறியிருந்தனர்.அதில் இருந்த உயிரினங்கள் அதிக உயரமும்,மெல்லிய உடம்பையும் கொண்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.இவ்வாரான ஏராலமான கதைகள் காணப்படுகின்றன.எல்லாம் கதைகள்தானே தவிர நிஜங்கள் அல்ல.
பறக்கும் தட்டுகள் பற்றிய விளக்கம் என்ன?

பறக்கும் தட்டு என்ற பெயரில் ஒன்று இந்த உலகுக்கு அடிக்கடி வந்து போவதாகவும் அதில் ஏதோ மனிதனை ஒத்த தோற்றத்தில் உள்ளவர்கள் இருப்பதாகவும் அவர்கள் தங்களுக்கென்று குறிப்பிட்ட வடிவத்தில் ஒரு வாகனத்தை வைத்துக் கொள்வதாகவும் அது உலகில் உள்ள வாகனங்களை விட வித்தியாசப் படுவதாகவும் சொல்லப் படுகிறது.ஆனால் இவையனைத்தும் வடி கட்டிய பொய்களாகும்.

மில்லியன் கணக்கில் பறக்கும் தட்டுக்கள்(?)
கடந்த 40 வருட காலப் பகுதிக்குள் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் வேற்றுக் கிரகங்களில் இருந்து வருவதாக நம்பப் படும் மர்மப் பொருட்களை,பறக்கும் தட்டுக்களை தாம் கண்டதாக கூறியுள்ளனர்.1974ம் ஆண்டு அமெரிக்காவில் இது தொடர்பாக கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப் பட்டது.அதில் அநேகர் இத்தகைய மர்மப் பொருட்களை கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.(இதுவும் இதுவரைக்கும் நிரூபிக்கப் படவில்லை)
1952ம் ஆண்டில் மாத்திரம் இவ்வாரான 1500 பறக்கும் தட்டுக்கள் வரை தெரிந்ததாக உலகின் பல பாகங்களில் இருந்தும் தகவல்கள் தெரிவிக்கப் பட்டன.அநேகமானோர் பறக்கும் தட்டுக்களாகக் கருதியவை வித்தியாசமான உரு அமைப்பை உடைய விமானங்கள்,
முகிற்கூட்டங்கள்,நட்சத்திரங்கள்,செய்மதிகள் ஆகியவை தாம் என்று பின்பு புலனாகியது.


ராடார் எனும் கருவியில் சிக்காத நவீனரக போர் விமானம் (இதைத்தான் பறக்கும் தட்டு என நினைத்து விட்டார்களோ)


அதே போன்றுதான் 1964ம் ஆண்டு சுவீடனுக்கு மேலாக பறக்கும் தட்டுக்களை அவதானித்ததாக கிட்டத்தட்ட 1000க்கும் மேற்ப்பட்டவர்கள் தெரிவித்தனர்.ஆனால் அத்தனை பேரும் அதை ஒரு ராக்கட் வடிவத்திற்குத்தான் ஒப்புக் காட்டினார்கள்.இதுவும் இது வரைக்கும் உண்மையென்று யாராலும் நிரூபிக்கப் படவில்லை.
அது போன்றே ஈஸ்டர் தினத்தின் முக்கியத்துவம் மிக்க மோய் உருவச்சிலை வேற்றுக்கிரக வாசிகளின் உதவியுடனேயே நிர்மானிக்கப் பட்டதாக சிலர் நம்புகின்றனர்.ஆனாலும் இவைகள் பொய்யான தகவல்கள் என விஞ்ஞானிகள் உருதியாக கூறிவிட்டனர்.

மனிதன் விண்ணில் வாழ முடியுமா?
இந்த உலகைப் பொருத்தவரை மனிதன் வாழ்வதற்குறிய சிறப்பான தகுதியான இடமாக இறைவன் பூமியை மாத்திரம் தான் அமைத்திருக்கிறான் பூமியல்லாத எந்தக் கிரகத்திலும் மனிதன் வாழ முடியாதென்பது உருதியாக்கப் பட்ட விஞ்ஞானமாக இருக்கிறது.
இதையே திருமறைக் குர்ஆனும் தெளிவாக உருதிப் படுத்துகிறது.

பூமியில் தான் வாழ முடியும்.


மனிதன் பூமியில் மாத்திரம் தான் வாழ முடியும் என்பதை கீழ்க்கானும் திருமறை வசனங்கள் தெளிவா எடுத்தியம்புகின்றன.


அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும் வசதியும் உள்ளன என்றும் நாம்கூறினோம்.(2:36)

(
இங்கிருந்து) இறங்கி விடுங்கள்! உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவர்களாவீர். உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும் வசதியும் உள்ளன என்று (இறைவன்) கூறினான்.(7:24)

'
அதிலேயே(பூமியிலேயே)வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே வெளிப்படுத்தப்படுவீர்கள் என்றும் கூறினான்.(7:25)
 
பூமியில் உங்களை வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் அதில் ஏற்படுத்தினோம். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்(7:10)

அவனது கட்டளைப்படி வானமும் பூமியும் நிலை பெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. பின்னர் அவன் உங்களை ஒரே தடவை அழைப்பான். அப்போது பூமியிலிருந்து வெளிப்படுவீர்கள்(30:25)

இவ்வசனங்களில் இப்பூமியில் தான் மனிதர்கள் வாழ முடியும் என்ற கருத்துகூறப்பட்டுள்ளது.

பூமிக்கு மிக அருகில் அதன் துணைக் கோள் சந்திரன் உள்ளது. சூரியக் குடும்பத்தில் பூமியையும் சேர்த்து 9 கோள்கள் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியைத் தவிர வேறு எந்தக் கோளிலும் பூமியின் துணைக் கோளான சந்திரனிலும் மனிதன் வாழ முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மெர்குரி எனும் புதன் கோளை எடுத்துக் கொள்வோம். சூரியனிலிருந்து 5 80 00 000 கி.மீ. தொலைவில் உள்ளது. இரண்டு காரணங்களால் இங்கே மனிதன் வாழ முடியாது.


முதலாவது இக்கோளில் காற்று இல்லை. அடுத்து இக்கோளின் அதிகப் பட்ச வெப்பம் 480 டிகிரி சென்டிகிரேடும் குறைந்தபட்ச வெப்பம் 180 டிகிரி சென்டிகிரேடும் ஆகும். இது பூமியில் மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியாத 40 டிகிரி வெப்பத்தை விட 12 மடங்கு அதிகம்.


அதே போன்று பூமியின் ஈர்ப்பு விசையைப் போன்று மூன்றில் ஒரு பங்கு ஈர்ப்பு விசையே இக்கோளில் உள்ளது.


வீனஸ் எனப்படும் வெள்ளிக் கோளை எடுத்துக் கொண்டால் சூரியனிலிருந்து 10 08 00 000 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கும் 457 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் நிலவுகிறது. இதுவும் பூமியின் அதிகப்பட்ச வெப்பத்தைப் போல் சுமார் 10 மடங்கு ஆகும். மேலும் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான ஆக்ஸிஜனும் இங்கு இல்லை. எனவே இது கொதிக்கும் கோள் என்று அழைக்கப்படுகிறது. இங்கும் மனிதர்கள் வாழ முடியாது.

மார்ஸ் எனப்படும் செவ்வாய் கிரகத்திலும் மனிதன் வாழ முடியாது. சூரியனிலிருந்து 23 கோடி கி.மீ. தொலை விலுள்ள இக்கிரகத்தில் பூமியிலுள்ள காற்றில் நூறில் ஒரு பங்கு தான் உள்ளது. அந்தக் காற்றிலும் ஒரு சதவிகித அளவுக்குத் தான் ஆக்ஸிஜன் உள்ளது. இங்கே அதிகபட்ச வெப்பம் 87 டிகிரி சென்டிகிரேடும் குறைந்தபட்ச வெப்பம் மைனஸ் 17 டிகிரியும் ஆகும். இதனால் இங்கும் மனிதன் வாழ முடியாது.


ஜூபிடர் எனும் வியாழன் கோள் சூரியனிலிருந்து 78 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இது பாறைக் கோளமாக இல்லாமல் வாயுக் கோளமாக உள்ளது. மேலும் இங்கு பூமியின் ஈர்ப்பு விசையை விட இரண்டரை மடங்கு அதிகம். இதனால் நமது எடை இரண்டரை மடங்கு அதிகமாகின்றது. நமது எடையை நாமே தாங்க முடியாத நிலை ஏற்படும். எனவே இங்கும் மனிதன் வாழ முடியாது.

பறக்கும் தட்டு (கிராபிக்ஸ் படம்)


சாட்டர்ன் எனும் சனிக் கிரகம் சூரியனிலிருந்து 142 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு எப்பொருளும் உறைந்து போகும் அளவுக்கு மைனஸ் 143 டிகிரி சென்டிகிரேட் வெப்பமே உள்ளது.


யுரேனஸ் கிரகம் சூரியனிலிருந்து 178 கோடி கி.மீ. தொலைவிலும் நெப்டிய+ன் கிரகம் சூரியனிலிருந்து 450 கோடி கி.மீ. தொலைவிலும் புலூட்டோ கிரகம் சூரியனிலிருந்து 590 கோடி கி.மீ. தொலைவிலும் உள்ளதால் இந்தக் கிரகங்களில் கற்பனை செய்ய முடியாத கடுங்குளிர் நிலவுகின்றது. எனவே இவற்றிலும் மனிதர்கள் வாழ முடியாது.


பூமியின் துணைக் கோளான சந்திரனிலும் மனிதன் வாழ முடியாது. மனிதன் உயிர் வாழத் தேவையான தண்ணீர் காற்று எதுவும் இங்கு இல்லை. பகல் வெப்பம் 127 டிகிரி சென்டிகிரேடும் இரவு வெப்பம் மைனஸ் 173 டிகிரி சென்டிகிரேடும் ஆகும்.


சூரியனிலிருந்து 15 கோடி கி.மீ. தொலைவிலுள்ள ப+மியில் மட்டும் தான் மனிதன் வாழ முடியும்.


சில கோள்களில் உயிரினம் வாழ்ந்த தடயம் தென்படுகிறது என்றெல்லாம் கூறினாலும் அது நிரூபிக்கப்படவில்லை. மனிதன் பூமியில் மட்டும் தான் வாழ முடியும் என்பதை விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்கிறார்கள்.


மனிதன் தாங்கிக் கொள்கின்ற அளவுக்கு வெப்பமும் குளிரும் பூமியில் மட்டுமே உள்ளது. சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனைக் கரிக் கட்டையாக்கி விடும். சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும். உயிர் வாழ அவசியமான காற்றும் ப+மியில் தான் இருக்கிறது. ஆக்ஸிஜன் துணையுடன் சில நாட்கள் விண்வெளியில் அல்லது சந்திரனில் தங்குவதை வாழ்வது என்று கூறக் கூடாது.

அதை விட முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனி லிருந்து 23 டிகிரி சாய்வாகச் சுழல்கிறது. இப்படிச் சாய்வாகச் சுழல்வதால் தான் கோடை குளிர் வசந்தம் மற்றும் இலையுதிர் காலங்கள் ஏற்படுகின்றன. வருடமெல்லாம் ஒரே சீரான வெப்பமோ குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இராது.

நவீனரக போர் விமானம் -  இதர போர் விமானங்களுடன்


இறைவன் சொன்ன வார்த்தைகள் விஞ்ஞானமே தோற்றுப் போகும் அளவு மிகவும் உருதியானதாக உள்ளது.

ஏன் எனில் மனிதன் சுகமாக தனது வாழ்வை இந்தப் பூமியில் மாத்திரம் தான் கழிக்க முடியும் என்பது முக்காலமும் அறிந்த இறைவன் விதித்த முறையாகும்.

ஆக எவ்வளவு ஆய்வுகள் மேற்கொண்டாலும் கடைசிவரை மனிதன் இந்த பூமியில் மாத்திரம் தான் வாழ முடியும் ஒரு சில நாட்கள் மாத்திரம் தான் எடுத்துச் செல்லும் ஆக்சிஜனைப் பயன் படுத்தி மற்ற கோள்களில் தங்க முடியும் அது தவிர பூமியில் வாழ்வதைப் போல் வாழ இயலாது என்பது தெளிவாகி விட்டது.

விண்ணில் உயிரினங்கள் வாழ்கிறதா?

பூமியில் மாத்திரம் தான் மனிதன் வாழ முடியும் என்று திருமறை வசனம் தெரிவித்தது விஞ்ஞானமும் அதனை உருதிப்படுத்தியது.ஆனால் வின்னில் மனிதனால் வாழ முடியாதே தவிர அங்கு சில உயிரினங்கள் வாழ்கின்றன என்று விஞ்ஞானம் ஊகிப்பதை திருமறை மறுக்கவில்லை.

பூமியல்லாத மற்ற இடங்களில் மற்ற சில உயிரினங்கள் வாழத்தான் செய்கின்றன என்று திருமறையில் இறைவனே குறிப்பிடுகிறான்.

(
ஆனால் பறக்கும் தட்டு தொடர்பான உயிரினங்கள் பற்றிய செய்திகள் பொய்யானவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்)

வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. அவன் விரும்பும் போது அவர்களைத் திரட்டுவதற்கு ஆற்றலுடையவன்(42:29)

மேற்கண்ட வசனத்தின் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும் என்ற வாசகத்தின் மூலம் பூமி அல்லாத மற்ற இடங்களில் நமது விஞ்ஞானத்தினால் இது வரை கண்டு பிடிக்காத (அறிவியல் வளர்ச்சியின் மூலம் பிற்காலத்தில் கண்டு பிடிக்கலாம்) உயிரினங்களை இறைவன் படைத்திருக்கும் செய்தியை தெளிவாக குறிப்பிடுகிறான்.

துருவப் பிரதேச ஆய்வின் போது செவ்வாயில் இருந்து விழுந்ததாக சொல்லப் பட்ட பனியைப் பற்றி ஆய்வு செய்யப் பட்டதில் அதன் உள்ளே இருந்த பாசிலைப் பற்றிய செய்திகளை அறிந்திருப்பீர்கள்.அந்த பாசிலைப் பற்றிய செய்திகள் உண்மையானதாக இருப்பின் திருமறையின் இவ்வசனத்தை விஞ்ஞானம் உருதிப் படுத்திய பட்டியலில் முதன் முதலில் இந்தப் பாசிலைப் பற்றிய செய்தியே இடம் பிடிக்கும்.

இந்தப் பாசிலைப் பற்றிய செய்தி செவ்வாய் மற்றும் அதைப் போன்ற மற்ற கோள்களிலும் சூட்சும உயிரினங்கள் (Micro-Organism) இருப்பதாகவே கூறுகின்றன.

உதாரணமாக மனிதனாகிய நாம் கரிமம் அடிப்படையிலான உயிரினமாக (Cabom Based Organism) படைக்கப் பட்டுள்ளோம்.இதே போல இந்தப் பேரண்டத்தின் மற்றக் கோள்களில் சிலிக்கான் (Silicon) அல்லது கந்தகம் (Salphur) அல்லது அதைப் போன்ற வேறு தனிமங்களை அடிப்படையாகக் கொண்ட உயிரினங்கள் இருக்கலாம்.

ஆனால் அப்படிப் பட்ட கோள்களில் புவிவாழ் உயிரினங்களாகிய நாம் ஒரு போதும் கண்டிப்பாக வாழ முடியாது என்பது தெளிவான விஷயமாகும்.

எது எப்படியோ விஞ்ஞானம் சொல்கிறதோ இல்லையோ முக்காலமும் அறிந்த இறைவன் பூமியில் மாத்திரம் தான் மனிதன் வாழ முடியும் என்றும் பூமியல்லாத மற்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றன என்றும்  தெளிவாக சொல்லியுள்ளான் இதுவே நமது நம்பிக்கைக்கு போதுமான ஆதாரமாகும்.

உதவியவை

சகோதர் பி.ஜெ அவர்களின் திருக்குர்ஆன் மொழியாக்கம் விளக்கம் பகுதி

சகோதர் ஏ.கே.அப்துர் ரஹ்மான் அவர்களின் திருக் குர்ஆனின் அறிவியல் சான்றுகள்.

டிஸ்கவரிசேனல்