Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Thursday 30 September, 2010

அறிவிப்பு

இத்தளம் இஸ்லாமியர்கள் மத்தியில் உள்ள இயக்க சிந்தனைகளை மாற்றி இம்மை மறுமை வெற்றிக்கு வழி ஏற்படுத்த ஆரம்பிக்கப்பட்டது . இதில் உள்ள குறைகளை சுட்டி காட்டினால் தவறு இருந்தால் திருத்தி கொள்கிறோம்.

Friday 24 September, 2010

கலைஞர் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது ; அம்மா என்று சொன்னால்தான் உதடுகள் ஒட்டும் - இதுவா பகுத்தறிவு

நமது நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் மிகப் பெரிய அறிவாளிகளாகவும், சிந்தனையாளர்களாகவும் அப்பாவி மக்களால் பார்க்கப்படுகின்றனர். ஆனால் உண்மையில் சராசரி மனிதனின் அறிவை விட குறைந்த அறிவு படைத்தவர்களாகத்தான் நமது அரசியல்வாதிகள் உள்ளனர்.

Thursday 23 September, 2010

பாடாய் படுத்தும் பன்றிக்காய்ச்சல்

கடந்த ஆண்டு அமெரிக்காவின் மெக்ஸிகோவில் பரவிய பன்றிக்காயச்சல் நோயால் பல ஆயிரம் பேர் தங்களின் உயிரை இழந்தனர். இது தொற்றுநோய் என்பதால் அங்கு வசித்து வந்த உலகின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் இந்நோய் பரவியது. இதன் மூலம் உலகின் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா இந்தக் கொடிய உயிர்க்கொல் நோயை பரப்பியது.

கலவரத்தை ஏற்படுத்திய விநாயகர் ஊர்வலம்

     விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியாக நடத்தப்படுமா? என்ற கட்டுரை போட்டு ஒரு நாள் கூட ஆக வில்லை. ஒரு செய்தி என் மனைதி வெகுவாக பாதித்தது. அதாவது ஆந்திராவில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சிலையைக் கரைக்க ஏரி, குளங்களுக்கு வந்தபோது அதில் மூழ்கி 21 பேர் இறந்துள்ளனர். இது வருந்தத்தக்க ஒன்றாகும்.

Tuesday 21 September, 2010

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அமைதியாக நடத்தப்படுமா?

இந்தியாவைப் பொறுத்தவரை எந்த நாடுகளிலும் இல்லாத வகையில் மதச்சார்பற்ற அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதாவது எந்த ஒரு நபரும் தான் விரும்பும் மதத்தை பின்பற்றலாம். வழிபடலாம். எந்த ஒரு நபரும் எந்த ஒரு மதத்தையும் பின்பற்ற இந்திய சட்டத்தில் இடமுண்டு.

தாம்பரத்தில் உலவும் பேய் பீதி

சமீபத்தில் சென்னை தாம்பரம் பகுதியில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடைபெற்றது. அது என்னவென்றால் தாம்பரம் ரயில்வே ஊழியர்களும், தாம்பரம் பகுதி வாசிகளும் தண்டவாளத்தில் ஒரு பூஜை செய்தனர். இந்த பூஜை எதற்கென்றால் இங்கு ஆவிகள் உலவுவதாகவும், அதனால் பலர் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் அடிபட்டு இறந்து விடுகின்றனர் என்பதாலும் இந்த பூஜை செய்தால் அங்கு உலவிக் கொண்டிருக்கும் இறந்தவர்களின் ஆவி அந்த இடத்தை விட்டு போய் விடும் என்பதற்காகவும் இந்த பூஜை நடத்தப்பட்டது.

Sunday 12 September, 2010

பிச்சைக்காரர்களின் புகலிடம்


                                                                                             நன்றி : தினகரன் நாளிதழ் 
                                                                                                               

Saturday 11 September, 2010

வாசகர்கள் கவனத்திற்கு :

நான் எப்போதும் யாரிடமும் வாழ்த்து சொல்வதில்லை. சிறு வயதில் சொல்லியிருக்கலாம். ஆனால் இப்போது யாருக்கும் வாழ்த்து கடிதமும் அனுப்புவதில்லை. பிறரை நாம் எப்படி வாழ்த்த முடியும். நாம் வாழ்த்தினால் அவர் நன்றாக இருந்து விடப் போகிறாரா?

மூட நம்பிக்கையின் உச்சகட்டம்

மூட நம்பிக்கைக்கும், பைத்தியக்காரத்தனத்திற்கும் அளவே இல்லாமல் போய் விட்டது. யாரைக் கும்பிட வேண்டும். எதைக் கும்பிடக் கூடாது என்று நம்மில் பல பேருக்குத் தெரியவில்லை. இறைவன் ஒருவனைத் தவிர மற்ற அனைத்துமே அவனின் படைப்பில் உருவானதுதான்.
இப்படி இறைவன் படைத்த படைப்பைக் கண்டு மனிதன் இறைவனை வணங்காமல், அவன் தயாரித்த பொருள்களையே அவன் வணங்கும் கொடுமை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வணக்கம் என்பது இறைவன் ஒருவனுக்கு மட்டும்தான்.

Thursday 9 September, 2010

சிறந்த ஆன்டி வைரஸ்

இணைய தளம் இல்லாமல் உலகம் இல்லை என்றாகிவிட்டது. நம்மில் பெரும்பாலானோர் இணைய தளத்தில் செல்லும்போது பாதுகாப்பில்லாமல் செல்கின்றனர். அதாவது தன்னுடைய கம்ப்யூட்டரில் தகுந்த ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் இல்லாமல் செல்கின்றனர்.

நாம் பயன்படுத்தும் பல ஆன்டி வைரஸ் சாப்ட்வேர்கள் டெமோ வர்ஷனாக கிடைக்கின்றன. இந்த டெமோ வர்ஷன் ஆன்டி வைரஸ்களைப் பயன்படுத்துவதன் மூலம் அது மிகுந்த தாக்குதலை ஏற்படுத்தும் வைரஸ்களை கட்டுப்படுத்தாது. அப்படி கட்டுப்படுத்து என்று சொன்னால் அது முழுமையான சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்திடு என்று சொல்லும்.

அன்பான வாசகர்களே மிகுந்த வேலைப் பளுவின் காரணமாக செய்திகளைப் போட முடியவில்லை. கிடைக்கும் சிறு  சிறு நேரங்களில்தான் செய்திகளைப் போட முடிகிறது சிரமத்திற்கு வருந்துகிறோம்...

வீணாகும் உணவு தானியங்கள்

மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?
சமீபத்தில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது வீணாகிப் போய்க் கொண்டிருக்கும் உணவு தானியங்கள் விஷயம். மத்திய அரசின் கையிருப்பில் 60 ஆயிரம் டன் உணவு தானியங்கள் (அரிசி, கோதுமை) உள்ளது. அத்தனையும் வீணாகிப் போனாலும் பரவாயில்லை...

Wednesday 8 September, 2010

இறைவன் படைப்பில் அற்புதங்கள்

தேனை சேமிக்கும் தேனீ
தேன் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். கடவுள் படைப்பில் உலகத்தில் எவ்வளவோ அற்புதங்கள் காணக் கிடக்கின்றன. கடவுள் அற்புதத்தில் தேன் மட்டும் பல வகைகளில் நமக்கு மருந்தாக பயன்படுகிறது. தேனை நம் உடல் உபாதைகளுக்குத் தக்கவாறு பயன்படுத்தலாம்.


தேனீக்கள் தேனை எவ்வாறு சேமிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? திருக்குர்ஆன் நன்கு படித்தவர்களுக்கு மட்டுமே அதன் ரகசியம் தெரியும். தற்போது இது குறித்து ஆராய்ச்சி செய்ததின் மூலம்தான் கண்டறிந்து உள்ளனர்.


நம்மில் பெரும்பாலோர் தேனீக்கள் தேனை எவ்வாறு சேமிக்கிறது என்று ஆராய்ச்சி செய்யாமல் யாரே ஒருவர் விட்ட கதையின் மூலம் நாம் அதைப் பற்றி சிந்திக்காமல் பலரிடம் உளறிக் கொட்டுகிறோம். எவ்வாறு என்றால் தேனீக்கள் பூக்களில் உள்ள தேனை உறிஞ்சி அதை தனது கூட்டல் சேமிக்கும்போது மலத் துவாரம் வழியாக வரும் உணவுதான் தேன் என்று விபரம் தெரியாத பலர் கூறுகின்றனர். ஆனால் தற்போது ஆராய்ச்சியின் மூலம் தேன் அவ்வாறு தேனை சேமிக்கவில்லை.
அதற்கு இரண்டு வயிறு உண்டு. ஒரு வயிற்றின் மூலம் உணவுகளை உண்டு மலத்துவாரத்தின் மூலம் கழிவுகளை வெளியேற்றுகிறது. மற்றொரு வயிற்றில்தான் தேனை சேமித்து சில ரசாயன மாற்றங்களைச் செய்து வயிற்றின் கீழ் பகுதியில் வேறொரு துவாரத்தின் மூலம் தேனை சேமித்து வைக்கிறது என்று அறிவியல் அறிஞர்கள் கண்டு பிடித்துள்ளனர்.



நம்மில் பலபேர் தேன் என்பது தேனீயின் கழிவுப் பொருள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தோம். ஆனால் அவ்வாறு அல்ல கழிவுப் பொருள் என்பது வேறு. தேன் என்பது வேறு என்று அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்து உள்ளனர். இதைத்தான் 1400 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட திருக்குர்ஆனில் இறைவன்,
"மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளி-ருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!'' என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளி-ருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது
(திருக்குர்ஆன் 16:68,69)
வயிறுகளிலிருந்து என்ற வார்த்தையை சிந்தித்து பார்க்கவும். வயிறுகள் என்றாலே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட என்ற பொருள்படும். உடனே நீங்கள் "அப்போ தேனீக்களுக்கு பல வயிறுகள் உள்ளனவா?'' என்று கேட்கக் கூடாது. இப்போது இரண்டு வயிறுகள்தான் உள்ளன என்று கண்டறிந்துள்ளனர்



திருக்குர்ஆனை சிந்தித்து வாசிப்பவர்களுக்கு இதைப் பற்றி நன்கு தெரியும். இருந்தபோதிலும் திருக்குர்ஆனைப் பற்றி தெரியாத சிலருக்கு இது புதிய தகவலாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Monday 6 September, 2010

இஸ்லாமியப் பார்வை: கண்டு கொள்ளப்படாத கண்டுபிடிப்பாளர்

இஸ்லாமியப் பார்வை: கண்டு கொள்ளப்படாத கண்டுபிடிப்பாளர்: "இலங்கை தவ்ஹீத் சகோதரரின் உலக சாதனை. வீடியோ ஆதாரத்துடன்.MOTOR BIKE IN A HAND BAGதொகுப்பு - Rasmin M.I.Scஉலகிலேயே மிகச் சிரிய மோட்டார் பைக் -..."

Thursday 2 September, 2010

எச்சரிக்கை

சுய வைத்தியர் ஆக வேண்டாம்
குழந்தைக்கு உடல் நலக்குறை ஏற்பட்டவுடன் நாம் என்ன ஏதோ என்று பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வோம். அங்கே மருத்துவர் பரிசோதித்து உடல் நலக்குறைக்கு தக்க வகையில் மருந்துகளை எழுதிக் கொடுத்தனுப்புவார்.
இதில் மற்றொரு வகையினர் உள்ளனர். அதாவது குழந்தைக்காகட்டும் தனக்காகட்டும் அவர்களே மருத்துவர்களாகி விடுவார்கள். மெடிக்கல் ஷாப்புக்கு சென்று குழந்தைக்கு பாராசிட்டமல் மாத்திரைகளையும், தனக்காக ரான்பாக்கி மாத்திரைகளையும் வாங்கிக் கொண்டு வந்து விடுவார்கள்.

இதில் எந்த அளவுக்கு அந்த மாத்திரைகளை கொடுக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. ஓவர் டோஸ் கொடுப்பதின் மூலம் குழந்தைக்கும், தனக்கும் அவர்களே வேட்டு வைத்துக் கொள்கின்றனர்.
இப்படி சுயமாக மருத்துவர் ஆக வேண்டாம் என்று சிட்னி பல்கலைக் கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் கூறியுள்ளார். இப்படி சுய வைத்தியர் ஆவதன் மூலம் எந்த நேரத்திற்கு எந்ததெந்த வகையான, எவ்வளவு மாத்திரைகளை இவர்கள் சரிவரத் தெரியாமல் உட்கொள்கின்றனர்.
மெடிக்கல் ஷாப்பில் இருக்கும் ஊழியர் இப்படித்தான் மருந்துகளைப் போட வேண்டும் என்று கூறினாலும் படிக்கத் தெரியாதவர்கள் சிலர் எந்தெந்த வேளைக்கு என்னென்ன மாத்திரைகளைப் போட வேண்டும் என்பதை மறந்துவிட்டு தப்பும் தவறுமாக மாத்திரைகளைப் போடுவதால் உடல் உபாதைகளுக்கும், ஸைடு எஃபெக்ட் எனப்படும் பக்க விளைவுக்கும் ஆளாகின்றனர்.
என்னதான் தகுந்த மருத்துவரிடம் தக்க ஆலோசனை பெற்று மருந்து வாங்கி உண்டாலும் எழுதிக் கொடுக்கும் மருத்துவரே சில சமயங்களில் தவறான மருந்துகளை எழுதிக் கொடுப்பதால் இதுபோன்ற பக்க விளைவுக்கு அப்பாவி பொது மக்கள் ஆளாகின்றனர்.
இதற்கு உதாரணத்திற்கு பல சம்பவங்களைச் சொல்லலாம். சமீபத்தில் நன்மங்கலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி குழந்தை பெற்ற இரண்டு மாதத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைச் சந்தித்து உடல் நலக்குறைவு பற்றி எடுத்துக் கூற, மருத்துவரோ சில மருந்துகளை எழுதிக் கொடுத்திருக்கிறார்.
அவர் எழுதிக் கொடுத்த மருந்துகளை அந்தப் பெண்மணியின் கணவர் அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்புக்கு சென்று வாங்கி வந்து தன் மனைவியிடம் கொடுக்க அவரே அதை உட்கொண்ட சில நேரங்களில் உடல் எங்கும் கொப்புளங்கள் ஏற்படத் தொடங்கியது. இது குறித்து மருந்து எழுதிக் கொடுத்த மருத்துவரிடம் சென்று பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணியின் கணவர் சென்று கேட்கவே, "நான் சரியான மருந்துதான் எழுதிக் கொடுத்தேன். நீங்கள் அதை சரியாகப் போடாமல் தவறாகப் போட்டதால்தான் இப்படி ஆகியுள்ளது என்று மழுப்பியுள்ளார்.
பாதிப்பட்ட அந்தப் பெண்மணியின் கணவர் மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்துகளையும், மெடிக்கல் ஷாப்பில் வாங்கிய மருந்துகளையும் எடுத்துக் காட்ட வாய் அடைத்துப் போன மருத்துவரோ நாளை வாருங்கள் என்று கூறி எஸ்கேப் ஆனார்.
உட-ல் கொப்புளங்கள் நிறைந்து புண்ணாகிப் போன அந்தப் பெண்மணியை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்ற நிலையிலும் அந்தப் பெண்மணியின் உடல் நிலை தேரவில்லை. உடல் நிலை மிகவும் மோசமாகி அவர் இப்போது இறந்து விட்டார். இப்போது அந்தப் பெண்மணியின் கணவர் இரண்டு மாத கைக்குழந்தையை வைத்துக் கொண்டு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.
இது யார் குற்றம்... மருந்து எழுதிக் கொடுத்த மருத்துவரின் குற்றமா? அல்லது மருந்தை கொடுத்த மெடிக்கல் ஷாப் ஊழியரின் குற்றமா? அல்லது அந்த மருந்ததை தயாரித்த நிறுவனத்தின் குற்றமா? ஒன்றுமே புரியவில்லை. இது குறித்து மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர் என்ற தகவல் வேறு.
இப்படித்தான் மருந்துகள் நம்மை பாடாய் படுத்துகின்றன. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மருந்துகளை போட இப்போது மிகவும் நடுங்கிக் கொண்டிருக்கின்றனர். எங்கே நமக்கும் இதுபோல் ஆகி விடுமோ என்று அஞ்சுகின்றனர்.

எனவே தக்க மருந்துகளை தகுந்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தும்படி பிரபல மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
யார் தகுந்த மருத்துவர்; எல்லோருமே போலியாகவே உள்ளனர். என்ன மருந்து; எல்லாமே போலியாகவே உள்ளது. யார் அந்த மருந்து தயாரிப்பு கம்பெனி; எல்லாமே போலியாகவே உள்ளது.
நாட்டில் மொத்தம் 350வகையான மருந்துகளுக்கு மட்டுமே மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இப்போது 350 வகையான மருந்துகள் மட்டும்தான் உள்ளதா? ஆயிரக்கணக்கான மருந்து வகைகளை மெடிக்கல் ஷாப்பில் விற்கின்றனர். புதிது புதிதாக முளைக்கும் மருந்து நிறுவனங்கள் பல்வேறு புதிய வகை மருந்துகளை தயாரித்து லேபில் லிகளைக் கொல்வதுபோல் மனிதர்களையும் கொன்று வருகின்றனர். இவர்களின் ஆராய்ச்சிக்கு மனிதனின் உயிர்தான் கேடயமா?
மக்களே மருந்துகளை பயன்படுத்தும்போது எச்சரிக்கையுடன் பயன்படுத்துங்கள்.
1. அது எந்த நிறுவனத்தின் தயாரிப்பு,
2. எப்போது தயாரிக்கப்பட்டது,
3. எப்போது அதன் காலாவதி தேதி முடிவடைகிறது
4. எந்த நோய்க்கு என்ன மருந்து உபயோகப்படுத்துவது.
என்பதைப் பார்த்து உபயோகிக்கவும்.
- ரா. மன்மதன்


இன்றைய குறும்பு
நல்ல மாத்திரையை இனி தேட வேண்டியதுதான்

Wednesday 1 September, 2010

கண்டு கொள்ளப்படாத கண்டுபிடிப்பாளர்

இலங்கை தவ்ஹீத் சகோதரரின் உலக சாதனை. வீடியோ ஆதாரத்துடன்.
MOTOR BIKE IN A HAND BAG
தொகுப்பு - Rasmin M.I.Sc
உலகிலேயே மிகச் சிரிய மோட்டார் பைக்  -   பைக்குள் தூக்கிச் செல்லப் படும் ஆச்சரியம். 
 நேரில் பார்வையிட்டார் (T.N.TJ) மாநில துணைத் தலைவர்


அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? (47:24)

திருமறைக் குர்ஆனை யார் படித்து சிந்திக்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான்.

திருமறையை படித்து அதன் மூலம் பல சாதனைகளை நிகழ்த்துபவர்களையும் இந்த உலகம் தினமும் கண்டு வருகிறது.

அந்த வரிசையில் மிகமுக்கிய இடத்தை பிடித்திருக்கிறார் ஓர் ஏகத்துவ சகோதரர் தனது கண்டு பிடிப்புகளுக்கு அடிப்படை திருக்குர்ஆன் தான் எனக் கூறும் இந்தச் சகோதரின் அபார கண்டுபிடிப்புகள் தொடர்பாக விரிவாக நாம் ஆராய்வோம்.

கண்டுபிடிப்பாளர் கவ்ஸ்ஸின் குடும்பப் பின்னனி என்ன?

52 வயதான அப்துல் மஜீத் கவ்ஸ் இலங்கையின் எழில் கொஞ்சும் மத்திய மலை நாட்டின் தாயகமான கண்டி வத்தே கெதர பொல்கொல்ல என்ற ஊரில் ஏழு பேர் கொண்ட குடும்பத்தில் நான்காம் நபராகப் பிறந்தார்.

இவர் தற்போது திஹாரிக்கு அண்மையிலுள்ள ஹொரகொல்லை ஒட்சட்வத்தை என்ற ஊரில் வசித்து வருகிறார்.

இவருடைய தந்தை இலங்கை இராணுவத்தில் இயந்திரவியல் நிபுனராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் கட்டுகஸ்தொட்டை என்ற ஊரில் வாகனம் திருத்தும் நிலையம் ஒன்றை நடத்தி வந்தார்.

அக்காலகட்டத்தில் ஒன்பது வயது சிறுவராக இருந்த கவ்ஸ் அவர்கள் பாடசாலையில் (School) நடந்த கண்காட்சி நிகழ்ச்சியில் நீராவியால் இயங்கும் ஓர் இயந்திரத்தை செய்து காட்சிப் படுத்தியதின் மூலமாக தனது அபார திறமையை வெளிக்காட்டினார்.

கண்ட களமும் கொண்ட கொள்கையும்.

ஓரே இறைவனை மட்டும் வணங்கி அவனுக்கு மாத்திரமே அணைத்து வணக்க வழிபாடுகளையும் செய்து திருமறைக் குர்ஆனையும் நபியவர்களின் வார்த்தைகளையும் மாத்திரம் தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டதின் மூலமாக தன்னை ஓர் தூய்மையான தவ்ஹீத் வாதியாக மாற்றிக் கொண்ட சகோதரர் கவ்ஸ் அவர்கள் திருமறைக் குர்ஆனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.

தனது கண்டுபிடிப்புகளின் அடிப்படையே திருக்குர்ஆன் தான் என மனந்திறந்து சொல்பவர்.

உலகிலேயே மிகச் சிரிய மோட்டார் வண்டியை கண்டுபிடித்தவர்.

நம்முடைய இந்த காலகட்டத்தில் நம் கண்முன் இருக்கும் ஜப்பான் சீனா இந்தியா போன்ற நாடுகளின் மோட்டார் வண்டிகள் அனைத்தையும் விட மிகச் சிரிய மோட்டார் வண்டியை இவர்தான் வடிவமைத்துள்ளார்.

உலகிலேயே மிகச் சிரிய மோட்டார் வண்டியொன்றை இந்தியாவைச் சேர்த்த ஒருவர் கண்டுபிடித்துள்ளதாக தனது நண்பர் மூலம் அறிந்து கொண்ட கவ்ஸ் அவர்கள் செய்தி அறிந்து சரியாக ஒன்பது மாதங்களில் 9 அங்குல மோட்டார் வண்டியை கண்டுபிடித்தார்.

இந்தியாவில் கண்டுபிடிக்கப் பட்ட மோட்டார் வண்டி 12 அங்குலம் உடையதாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

(வீடியோவைப் பார்க்க இங்கு க்லிக் செய்யவும்.)

கவ்ஸ் அவர்கள் கண்டுபிடித்த மோட்டார் வண்டியின் சிறப்பம்சங்கள்.

நமது வீடுகளில் அன்றாடம் நாம் பயண்படுத்தும் பொருட்களை வைத்தே இந்த சிரிய மோட்டார் வண்டியின் 40 வீதமான பாகங்களை கவ்ஸ் அவர்கள் வடிவமைத்துள்ளார்.

அத்துடன் மிக முக்கியமான அம்சம் என்னவெனில் இந்த மோட்டார் வண்டிக்கு மற்ற மோட்டார் வண்டிகளுக்கு உள்ளதைப் போன்ற செஸி என்ற பகுதி இல்லை என்பதுதான்.

மோட்டார் வண்டியைப் பொருத்தவரை மனிதனுக்கு முதுகெழும்பு எவ்வளவு முக்கிமோ அந்தளவுக்கு மோட்டார் வண்டிக்கு செஸி என்ற பகுதி முக்கியமாகும்.

செஸி இல்லாவிடில் மோட்டார் வண்டி இல்லை என்ற கருத்தை பொய்யாக்கி செஸி இல்லாமல் மோட்டார் வண்டியை இயக்க முடியும் என தன்னுடைய கண்டு பிடிப்பின் மூலம் நிரூபித்திருக்கிறார் கவ்ஸ்.

மோட்டார் வண்டி பற்றிய சில முக்கிய தகவல்கள்.

சகோதரர் அப்துல் மஜீத் கவ்ஸ் அவர்கள் தான் கண்டுபிடித்த மோட்டார் வண்டிக்கு வைத்துள்ள பெயர் Taprabane saying.. gift  from  allah  to  srilanka
 
இந்த மோட்டார் வண்டி 9 அங்குலம் உயரமும் 2.5 அடி நீளமும் கொண்டதாகும்.
அத்துடன் இந்த மோட்டார் வண்டி கைப் பையினுல் போட்டு செல்லும் வகையில் வெரும் 23 கிலோ கிராம் மாத்திரம் எடை கொண்டதாகும்.



வண்டி தொடர்பான இன்னும் சில குறிப்புகள்.

Speed 35-40 km/h

Fuel  -  1 bottle (petrol + oil)

Engine capacity   -  50cc

Gear   -  centrifuga
l

பட்ட கஷ்டமும் கிண்ணஸில் கிடைத்த பதிவும்.

சகோதரர் கவ்ஸ் அவர்கள் கண்டுபிடித்த இந்த மிகச் சிரிய மோட்டார் வண்டி உலக சாதனைகள் மற்றும் சாதனையாளர்களின் பெயர்கள் பதியப் பட்டு கவுரவப் படுத்தப் படும் கிண்ணஸ் என்ற புத்தகத்திலும் பதியப் பட்டு உலகின் மிகச் சிரிய மோட்டார் வண்டியை கண்டுபிடித்து வடிவமைத்தவர் என்ற பெருமையை இவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளது என்பது மிக முக்கியமான விஷயமாகும்.



















இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்காவின் நிறைவேற்றப் படாத வாக்குறுதி.

தான் கண்டுபிடித்த உலகின் மிகச் சிரிய மோட்டார் வண்டியை சகோதரர் கவ்ஸ் அவர்கள் அன்றைய இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதுங்கவின் முன்னிலையில் அலரி மாளிகையிலும் ஓட்டிக் காண்பித்தார்.  


அப்போது கவ்ஸ் அவர்களின் கண்டுபிடிப்பைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த சந்திரிக்கா சகோதரர் கவ்ஸை பாராட்டியதுடன் கண்டுபிடிப்புக்கான உரிமைச் சான்றிதழ் (பேடன்ட்) பெற்றுத் தருவதாகவும் ஜின்வா உலகக் கண்காட்சிக்கு அனுப்புவதாகவும் குறித்த கண்காட்சிக்காக ஜனாதிபதியின் நிதியிலிருந்து ஒரு தொகை பணம் தருவதாகவும் கூறினார்.

ஆனால் அவர் கூறிய அனைத்தும் இன்று வரை நிறைவேற்றப் படாத வெரும் வாக்குறுதியாகத்தான் இருக்கிறது.

நேரடியாக சந்தித்த TNTJ மாநிலத் துனைத் தலைவர்.

கண்டுபிடிப்பாளர் அப்துல் மஜீத் கவ்ஸ் அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணைத் தலைவர் சகோதரர் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் இலங்கை வந்த போது நேரடியாக சந்தித்துப் பேசினார்.

அவருடன் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் தேசிய நிர்வாகிகளும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அப்போது தனது கண்டுபிடிப்புக்களைப் பற்றி தெரிவித்த கவ்ஸ் அவர்கள் சிரிய ரக மோட்டார் வண்டியை ஓட்டியும் காண்பித்தார்.

சகோதரர் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் அவரின் கண்டுபிடிப்புகளைப் பாராட்டி உற்சாகப்படுத்தினார்.

(ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் ஹொரகொல்லைக் கிளையின் தலைவராக இருப்பவர் சகோதரர் கவ்ஸ் அவர்களின் மகன் தான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.)

சகோதரர் கவ்ஸின் இதர கண்டுபிடிப்புகள்.

தனக்கு இறைவனால் கொடுக்கப் பட்டுள்ள இந்த சிறப்பான அறிவுத் திறனை நல்வழியில் செலுத்தப் பாடுபடும் சகோதரர் கவ்ஸ் அவர்கள் சமுதாயத்திற்கு தேவையான் பல கண்டு பிடிப்புகளின் சொந்தக்காரராவார்.

தொழினுட்ப அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கண்டுபிடிப்புகளிலேயே கேஸ் மூலம் செயல்படும் வாகனங்கள் மிகப் பிரதானமானவை.

ஆனால் 1998ம் ஆண்டு சகோதரர் கவ்ஸ் அவர்கள் கண்டு பிடித்த பெற்றோல் மற்றும் காஸின் மூலம் இயங்கும் மோட்டார் வண்டி உலகில் தற்போதுள்ள மோட்டார் வண்டிகளை விட மிக வித்தியாசமானது.

காப்பரேட்டர் சம்பந்தப் படாமல் வாயு இணைப்பு வழங்கப் பட்டுள்ளமை இதன் விசேஷ அம்சமாகும்.

அப்துல் மஜீத் கவ்ஸ் வாயு இணைப்புக்கென்றே விசேஷ தொகுதியொன்றை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இது வரை உருவாக்கப் பட்டுள்ள அனைத்து வாகனங்களுக்கும் வாயு இணைப்பானது காப்பரேட்டருடன் சம்பந்தப்படுத்தப்பட்டே இணைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதிலுள்ள மற்றுமொரு விசேஷமான அம்சம் வண்டி போய்க் கொண்டிருக்கும் போதே பெற்றோலிலிருந்து வாயுவிற்கும் வாயுவிலிருந்து பெற்றோலிற்கும் மாற்றும் வசதி உள்ளதாகும்.தற்போது நடைமுறையில் உள்ள வாகனங்களில் வாயு தீர்ந்த பின்னர் தான் பெற்றோலிலும் பெற்றோல் தீர்ந்த பின்னர் தான் வாயுவிலும் (கேஸ்) இயக்க முடியும்.

பூமியதிர்ச்சியிலிருந்து பாதுகாக்கும் கருவி.

பலவகையான கண்டுபிடிப்புத் திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ள சகோதரர் கவ்ஸ் அவர்கள் பூமியதிர்ச்சியின் போது மக்களுக்கு அதனை முன்கூட்டியே தெரிவிக்கும் ஒரு கருவியையும் கண்டுபிடித்துள்ளார்.

சுனாமி போன்றவைகள் வரும் போது அல்லது வழமைக்கு மாற்றமாக ஏதாவது ஒரு செயல்பாடு கடலில் நடக்கும் போது அதனை தெரிவிப்பதற்கு உருவாக்கப் பட்ட கருவியைப் போல் சகோதரர் கவ்ஸ் அவர்கள் பூமியதிர்சி பற்றிய முன்னெச்சரிக்கைக் கருவியை உருவாக்கியுள்ளார்.

காட்டு யானையை விரட்டும் கருவி.

இலங்கையின் பல பகுதிகளிலும் காட்டு யானையின் தொல்லை இருப்பதாலும் அவை மக்கள் வாழும் பகுதிக்குள் வந்து மக்களுக்கு இடையூரை உண்டு பண்ணுவதாலும் அவற்றிலிருந்து பாதுகாப்புப் பெற காட்டு யானைகளை விரட்டும் ஒரு கருவியையும் இவர் கண்டுபிடித்துள்ளார்.

ஓட்டுனரின் வேலையை செய்யும் (முச்சக்கரவண்டி) ஆட்டோ.

ஓட்டுனர் செய்ய வேண்டிய பல்வேறு வேலைகளை ஓட்டுனர் இல்லாமலேயே தண்ணீரின் மூலம் செயல் படுத்தும் ஆட்டோ ஒன்றையும் இவர் கண்டுபிடித்துள்ளார்.

காற்றினால் இயங்கும் இன்ஜின்.

சகோதரர் கவ்ஸ் அவர்கள் காற்றின் மூலம் இயங்கும் இன்ஜின் ஒன்றையும் வடிவமைத்துள்ளார் இதனைப் பார்க்கும் போது ஒரு இன்ஜின் எவ்வாறு செயற்படும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

திடீர் தீ விபத்திற்கான தீர்வு.

ஹஜ் காலங்களில் மக்கள் அதிகமாக கூடியிருக்கும் நேரத்தில் திடீர் தீ விபத்துகள் ஏதும் ஏற்பட்டால் அவற்றை எப்படி தடுப்பது என்பதற்கு தன்னிடம் ஒரு சிறப்பான திட்டம் இருப்பதாக கூறும் கவ்ஸ் உரியவர்கள் முன்வந்தால் அதனை செய்து காட்டுவதாகவும் குறிப்பிடுகிறார்.

காற்சட்டைப் பைக்குள் இட்டுச் செல்லும் சைக்கில்.

இருதியாக இவர் காற்சட்டைப் பைக்குள் இட்டுச் செல்லக் கூடிய அளவுள்ள மிகச் சிரியதொரு சைக்கிலைக் கண்டுபிடித்துள்ளார்.உரிய சந்தர்ப்பத்தில் அதனை அறிமுகப் படுத்தவுள்ளதாகவும் இவர் தெரிவிக்கிறார்.

கண்டுகொள்ளப் படாத கண்டுபிடிப்பாளர்.

ஆரம்ப காலத்தில் உலகின் பல கண்டுபிடிப்புகளுக்கும் அறிவியல் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக இருந்த முஸ்லீம்கள் இன்று கல்வியறிவற்றவர்களாக மார்க்க மற்றும் உலக கல்விகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காதவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் அடிப்படை அமைத்த ஒரு சமூகம் இன்று ஒரு கண்டுபிடிப்பாளரை கண்டும் காணாமல் இருப்பது மிகவும் கவலைக்குறிய செய்தியாகும்.

அன்பின் இஸ்லாமிய நெஞ்சங்களே!

அப்துல் மஜீத் கவ்ஸ் போன்றவர்கள் நமது சமுதாயத்தின் அறிவியல் சிற்பிகள் இவர் போன்றவர்களின் கண்டுபிடிப்புத்தான் அறிவியலின் எதிர்காலம்.

ஆதலால் வீனான தொலைக்காட்டி நிகழ்ச்சிகளுக்கும் கேளிக்கை விளையாட்டுக்களுக்கும் தங்கள் பணங்களை வாரி வழங்கும் தனவந்தர்களே இவரைப் போன்ற கண்டுபிடிப்பாளர்களை ஊக்கப் படுத்துவதின் மூலம் நமது சமுதாயத்தை வளர்சிப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கு முன்வருவோமாக.

நன்றி : http://rasminmisc.blogspot.com