Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Saturday 11 September, 2010

மூட நம்பிக்கையின் உச்சகட்டம்

மூட நம்பிக்கைக்கும், பைத்தியக்காரத்தனத்திற்கும் அளவே இல்லாமல் போய் விட்டது. யாரைக் கும்பிட வேண்டும். எதைக் கும்பிடக் கூடாது என்று நம்மில் பல பேருக்குத் தெரியவில்லை. இறைவன் ஒருவனைத் தவிர மற்ற அனைத்துமே அவனின் படைப்பில் உருவானதுதான்.
இப்படி இறைவன் படைத்த படைப்பைக் கண்டு மனிதன் இறைவனை வணங்காமல், அவன் தயாரித்த பொருள்களையே அவன் வணங்கும் கொடுமை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வணக்கம் என்பது இறைவன் ஒருவனுக்கு மட்டும்தான்.

புல்லட் பாபாவுக்கு சூடம், சாம்பிராணி காட்டி
மாலை போட்டு வழிபடும் மக்கள்.
இறைவனின் சக்தியை மீறி வேறொரு சக்தி இந்த அண்டசராசரத்தில் இல்லை என்பது ஓரிறைக் கொள்கையில் இருக்கும் நம் சகோதரர்களுக்குத் தெரியும். ஆனால் பலர் எதை எதை கும்பிட வேண்டும் என்று கூடத் தெரியாமல் கண்டதையெல்லாம் கும்பிட்டு தன்னுடைய மூடத்தனத்தை வளர்த்து வருகின்றனர்.
ராஜஸ்தானில் பாலி நகரிலிருந்து ஜோத்பூர் செல்லும் சாலையில் 20 கி.மீ. தூரத்தில் சோட்டிலா என்ற கிராமத்தில் நடக்கும் வணக்க வழிபாடோ விநோதமானது. அதாவது ஒரு புல்லட்டை சாமியாகக் கும்பிடுகின்றனர்.
புதிதாக வாகனம் வாங்கியவர்கள் தங்களுடைய வாகனத்தை எவ்வித ஆபத்துமில்லாமல் ஓட்டுவதற்கு புல்லட் சாமி எனப்படும் அந்த புல்லட்டிற்கு மாலைபோட்டு மரியாதை செலுத்தி பின்னர் தனக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது என்று அந்த புல்லட்டிடம் வேண்டுகின்றனர்.
இது பற்றி புதிதாக செய்தி அறிபவர்கள் ஏன் இப்படி என்று கேட்டால் அதற்கு ஒரு கதையும் வைத்துள்ளார்கள்.
புல்லட்டை சுற்றி வந்து வணங்கும் பெண்கள்
அதாவது இருபரு வருடங்களுக்கு முன்னால் சோட்டிலா கிராமத்தில் ஓம் பனாசிங் என்ற ஒருத்தர் இருந்தாராம். ஒருநாள் இரவு புல்லட்டில் பாலி நகரிலிருந்து வீடு திரும்பி இருக்கிறார். வரும் வழியில் ஒரு மரத்தில் மோதி அவர் இறந்து விட்டார். இதை அறிந்த போலீசார் அவர் உடலையும், புல்லட்டையும் மீட்டுள்ளனர்.
உடலை உறவினர்களிடம் கொடுத்து விட்டு புல்லட்டை மட்டும் தள்ளிக் கொண்டு காவல் நிலையத்தில் நிறுத்தியுள்ளனர். மறுநாள் காலை புல்லட்டைக் காணாமல் காவலர்கள் தேடியபோது அந்த புல்லட் விபத்து நடந்த இடத்தில் இருந்ததாம். உடனே அந்த புல்லட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து விட்டு அதை மறுபடியும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். மறுநாளும் அதேபோல விபத்து நடந்த இடத்தில் அந்த புல்லட் நின்றிருந்ததாம்.
(இப்போது நான் சொல்வது என்னவென்றால் புல்லட்டின் சக்கரம் இருந்ததால்தானே அங்கு சென்றது. அந்த சக்கரத்தையும் கழட்டி வைத்திருந்தால் அது எப்படி நகர முடியும். இதை அந்த காவல்துறையினர் செய்யவில்லை. அப்படியே இருந்தாலும் புல்லட் எப்படி தானாக நகரும். இதை யாரே ஒருவன் வேண்டுமென்றே செய்திருக்கிறான்.)
இதைக் கூட அறியாத அந்த காவல்துறையினர் இதைக் கண்டு ஆச்சர்யப்பட்ட அந்த புல்லட்டை அந்த இடத்திலேயே விட்டு விட்டு சென்று விட்டனராம். இதனால் இதற்கு புல்லட் சாமியார் என்று பெயர் வந்ததாம். இப்படி அந்த ஊர் மக்கள் கதையளந்துள்ளனர். இப்போது அந்த புல்லட்டிற்கு மாலை போட்டு சூடம் காட்டி வேண்டி வருகின்றனர்.
இங்கு நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். எந்தப் பொருளும் (அதாவது உயிரற்ற பொருள்) ஒரு வினை ஏற்படாமல் அந்த இடத்திலிருந்து நகருவதில்லை. இது அறிவியல் விதி. அந்த புல்லட் காவல் நிலையத்திலிருந்து எப்படி விபத்து நடந்த இடத்திற்கு வந்தது. (இதை அற்புதம் என்று சொன்னால் அவர்களை நான் ஓட ஓட விரட்டி அடிப்பேன்)
சாமியின் அற்புதம் என்று சொன்னாலும் நான் விட மாட்டேன். சாமிக்கு என்ன வேறு வேலை இல்லையா என்று கேட்பேன். இங்கு கடவுளை நான் இழிநிலை படுத்தவில்லை. கடவுள் பெயரை தவறாக பயன்படுத்தக் கூடாது என்று சொல்ல வருகிறேன். இந்த அண்டசராசத்தையே படைத்தவர் இதுபோன்று சில்லித்தனமான வேலையை செய்து கொண்டிருக்க மாட்டார்.
எப்படியாவது ஒரு வகையில் சம்பாதிக்க வேண்டும். அதுதான் இந்த புல்லட்டின் கதையும். ரூம் போட்டு யோசிப்பாங்கன்னு நினைக்கிறேன். அந்த புல்லட்டை அங்கு நிறுத்தியவர்கள் கண்டிப்பாக உண்டியல் வைத்திருப்பார்கள். ஏன் என்றால் சாமியைப் பார்க்க வருபவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்த வேண்டும் என்று நம்முடைய கிழகட்டைகள் சொல்லியிருக்கும். அதையும் இந்த அறிவிலிகள் கடைபிடித்துக் கொண்டிருக்கின்றனர். (உண்டியலை எடுத்து விட்டு சாமி கும்பிடச் சொல்லுங்களேன். மறுநாளே புல்லட் அங்கு காணாமல் போய் விடும்.)
கடவுளின் பெயரால் என்ன கிருக்குத்தனமான காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை நாள்தோறும் வெளியாகும் செய்தியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். தான்தான் கடவுள் என்று ஏமாற்றும் ஒரு கூட்டம். நான் கடவுளிடம் பேசுபவன் என்று கூறும் ஒரு கூட்டம். நான் கடவுளின் புரோக்கர் என்று சொல்லும் ஒரு கூட்டம். இவர்கள் அனைவரும் வியாபார நோக்கத்தில்தான் இவ்வாறு அலைந்து கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில் செக்ஸ் லீலையைச் செய்து மாட்டிய நித்தியானந்தா சாமியார்கூட நான் கிருஷ்ணரின் அவதாரம் என்று கூறினார். கிருஷ்ணருக்கு அதீத சக்தி இருந்ததாக புராணங்களில் வரும் கதைகள் கூறும். அவ்வளவு சக்தி பெற்ற நித்தியானந்தா தன்னுடைய ரூமில் வைத்திருந்த காமிராவைக் கண்டறிய முடியவில்லை. (அவர் போலிச் சாமியார் என்பதற்கு இது ஒன்றே போதும்)
இவர்களைப் போன்ற போலிச் சாமியார்கள் இதுபோன்ற மூடநம்பிக்கையின் மூலமே வளர்கின்றனர். ''உன்னால் எப்படிடா கையில் தங்கச் சங்கிலி வரவழைக்க முடிந்தது. முடிந்தால் ஒரு பூசணிக்காயை உன்னுடைய மந்திரத்தால் வரவழை பார்க்கலாம்...'' என்று கூறுங்களேன். அவ்வளவுதான் அந்த மந்திரவாதி டென்ஷனாகி விடுவார். ஏனென்றால் சங்கிலியை கையில் மறைத்து வைக்கலாம்; பூசணிக்காயை மறைத்து வைக்க முடியுமா? இதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கடவுளை இதுபோன்று பொருளாகவும், கல்லாகவும், மண்ணாகவும், மரமாகவும், இலையாகவும், கிளையாகவும் பாவிப்பவர்கள் (இஸ்லாமியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் சிலர் தர்கா, கந்தூரி, தயாத்து, கட்டு, பில்லி, சூனியம், இறந்தவர்களைக் கும்பிடுவது போன்ற காரியங்களிலும் ஈடுபடுகின்றனர்) உலகில் பரந்து விரிந்து கிடக்கின்றனர். இவர்களை எப்படி திருத்துவது? யார் யாரே வந்து சொன்னார்கள். ஆசையைத் துறக்க வேண்டும் என்று புத்தர் சொன்னார். அவரையே கடவுளாக்கி இப்போது ஒரு கும்பல் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.
கடவுள் என்றால் யார் என்று கூட சில அறிவிலிகளுக்குத் தெரியாமல் அலைந்து கொண்டிருக்கின்றனர்.
கடவுள் என்றால்...
Ø  அவர் யாருக்கும் பிறக்கவும் இல்லை... யாராலும் பெறப் படவும் இல்லை...

Ø  எந்தத் தேவையும் அற்றவர்...

Ø  மனிதனுக்கு உள்ள பலகீனம் எதுவும் அவரிடம் (தாகம், உண்ணுவது, உறங்குவது, மல ஜலம் கழிப்பது, மனைவி மக்கள், இன்பம், துன்பம்) இல்லை...

Ø  மிகச் சிறந்தவர்...

Ø  அவரை யாரும் பார்த்ததில்லை... இவ்வுலகத்தில் பார்க்கவும் முடியாது...

Ø  அவருக்கு உருவம் உண்டு... ஆனால் இவ்வுலகத்தில் அவரைப் பார்க்க முடியாது... மறுமையில்தான் (இம்மை என்றால் இவ்வுலக வாழ்க்கை, மறுமை என்றால் தீர்ப்பு நாளுக்குப் பிறகு உள்ள வாழ்க்கை) அவரை பார்க்க முடியும்.

Ø  அவரை யாருடனும் ஒப்பிட்டுப் பார்ப்பது மடத்தனம்...

Ø  அவர் அண்டசராசரங்களையும் கட்டிக் காப்பவர்...

Ø  அனைத்தையும் கண்காணிப்பவர்...

Ø  கடுமையான தண்டனையைக் கொடுப்பவர்...

Ø  நல்லோர்களுக்கு சொர்க்கத்தில் இனிய வாழ்க்கையை கொடுப்பவர்...

Ø  தீயவர்களுக்கு கடுமையான தண்டனைகளைக் கொடுப்பவர்...

Ø   மரணத்தை ஒரு ஆட்டுக் குட்டியாகக் கொண்டு வந்து மரணத்துக்கே மரணத்தை கொடுப்பவர். (அதவாது தீர்ப்பு நாளுக்குப் பிறகு மரணம் என்பதே கிடையாது.)
இதைச் செய்பவர்தான் கடவுளாக இருக்க முடியும். இதை இஸ்லாம் நன்கு அறிவுறுத்துகிறது. அவருக்கு இணையாக யாரையும் வைக்கக் கூடாது என்றும் இஸ்லாம் கூறுகிறது.
ஆனால் மனிதரில் பலர் கடவுள் கோயிலில் மட்டும்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்; அவர் அங்கு மட்டும்தான் இருப்பார். வெளியில் வருவதில்லை. அவரை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அதன் விளைவுதான் எதை வேண்டுமானாலும் கும்பிடுவது. மூடத்தனத்தில் திளைப்பது.
கடவுள் மனிதனைப் படைத்தார். ஆனால் இந்த உலகத்திலே மனிதன் கடவுளைப் படைக்கிறான்.
கடவுளைப் பற்றி சரியான அறிவு இல்லாதவர்கள்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். அதனால் கடவுள் என்றால் யார் என்பதை அறிந்து கொள்ள திருக்குர்ஆனை பொருளறிந்து வாசியுங்கள். கடவுளின் அருளைப் பெறுங்கள்.



0 comments: