Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Thursday 23 September, 2010

பாடாய் படுத்தும் பன்றிக்காய்ச்சல்

கடந்த ஆண்டு அமெரிக்காவின் மெக்ஸிகோவில் பரவிய பன்றிக்காயச்சல் நோயால் பல ஆயிரம் பேர் தங்களின் உயிரை இழந்தனர். இது தொற்றுநோய் என்பதால் அங்கு வசித்து வந்த உலகின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் இந்நோய் பரவியது. இதன் மூலம் உலகின் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா இந்தக் கொடிய உயிர்க்கொல் நோயை பரப்பியது.


இந்தியாவில் மட்டும் பன்றிக்காய்ச்சல் நோயால் ஆயிரக்கணக்கானோர் பயாகினர். குறிப்பாக குஜராத்தில் அதிகபட்சமாக 800க்கும் மேற்பட்டோரும், தமிழகத்தில் 200க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்தனர். இந்நோய்க்கு உடனடியாக மருந்து கண்டு பிடிக்காததால் இதர ஆண்டி பயாடிக் மற்றும் தடுப்பு முறை ஆலோசனை மூலம் மருத்துவர்கள் இந்நோயைக் கட்டுப்படுத்த அறிவுரை வழங்கினர்.

ஓயாத இருமல், சளி, உடல் சோர்வு, கடுமையான வயிற்றுப்போக்கு, தலைவ போன்றவை இந்நோயின் அறிகுறி என்றும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் செல்லாமல் தொலைவிருந்தே பழக வேண்டும் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கைக்குட்டை அல்லது முகமூடி போட்டுக் கொண்டு தும்ப வேண்டும் என்றும், அவர்கள் தும்பும்போது அருகில் யாரும் இருக்கக் கூடாது என்றும், அவர்கள் தும்பும்போது வெளிவரும் காற்றில் மூலம் இந்நோய்க் கிருமி மற்றவர்களுக்கு பரவும் என்பதால் மற்றவர்களும் முகமூடி அணிந்து கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்தனர்.

அப்படி இருந்தும் இந்நோய் இந்தியா முழுவதுமில்லாமல் உலகெங்கும் பரவி வந்தது. இந்நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க 6 அல்லது 12 மாதங்கள் வரை ஆகலாம் என்று அப்போது மருத்துவர்கள் கூறினர்.

பன்றிக் காய்ச்சல் நோயைப் பரப்பும் ஹெச்1என்1 வைரஸ் 25 டிகிரி செல்சியஸ் வரை உள்ள தட்பவெட்ப நிலையில் உயிர் வாழும் என்பதால் இந்நோய் இந்தியாவுக்கு அறிமுகமான மாதமாகிய ஜூனில் குளிர்கால சீசன் துவங்கியதால் அனைவருக்கும் இது பரவ ஆரம்பித்தது. இந்நோய் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இந்திய மக்களை பீதியில் புரட்டிப் போட்டது.

அனைவரின் முகத்திலும் கை குட்டை மற்றும் முகமூடி அணிய வைத்தது. முகமூடிக்கு அதிக கிராக்கி ஏற்பட்டு மெடிக்கல் ஷாப்பில் 5 ரூபாய்க்கு விற்கப்பட்ட சாதாரண முகமூடி கூட 20 ரூபாய்க்கு விற்கும் நிலை ஏற்பட்டது. பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் 10ல் 7 பேர் முகமூடி அணியும் நிலைக்கு இந்நோயின் தாக்கம் அதிகரித்தது.

ஒரு வழியாக இந்நோய் பரவுவது நின்றவுடன் அப்பாடா என்று பெரு மூச்சு விட்ட இந்திய மக்களை திரும்பவும் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் பீதியடைய வைத்துள்ளது.

தற்போது வேகமாக பரவி வரும் இந்நோய்க்கு கடந்த ஒரு மாதத்தில் தமிழகத்தில் மட்டும் 12 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்நோய்க்கு போதிய தடுப்பு முறையை இந்திய அரசு ஏற்படுத்தவில்லை என்று மக்கள் ஒரு பக்கம் குறைகூறி வருகின்றனர்.

தற்போது பன்றிக் காய்ச்சலுக்கு புதிய மருந்து கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள் அதை பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தலாம் என்று கூறியவுடன் இந்த தடுப்பு மருந்தை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மருத்துவ முகாம் ஏற்படுத்தி தமிழக அரசு போட்டு வருகிறது.

சென்னை கிண்டியில் இந்த தடுப்பு மருந்து போடுவது கடந்த வாரம் சென்னை மாநகராட்சி அமுல்படுத்தியது. இந்த மருந்தை மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போடக் கூடாது என்றும், 3 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூக்கின் வழியாகவும், பெரியவர்களுக்கு ஊசியின் வழியாகவும் செலுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

மூக்கின் வழியாக செலுத்த 200 ரூபாயும், ஊசியின் வழியாக செலுத்த 350 ரூபாயும் கட்டணம் வசூக்கப்பட்டது. இதை அரசியலாக்கிய எதிர்கட்சிகள் தடுப்பு மருந்தை மக்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும் என்று குரலெழுப்பின.

என் மனைவி கூட "குழந்தைகளுக்கு தடுப்பூசி போடலாம் வாருங்கள்...'' என்று என்னை அழைத்தால். குழந்தைகளுக்கு போடலாமா வேண்டாமா என்பது எனக்கு அப்போது தெரியாது. இருந்தாலும் நான், "இப்போது அவசரப்பட வேண்டாம். எப்படி இருந்தாலும் இந்த மருந்தை இலவசமாக போட தமிழக அரசு அறிவிப்பு செய்யும். அப்போது போட்டுக் கொள்ளலாம்...'' என்று கூறினேன். மறுநாளே தமிழக அரசு இந்த மருந்தை இலவசமாக போடப்படும் என்று அறிவித்தது. ஆனால் இதை வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இலவசமாக போடப்படும் என்று தமிழக அரசு கூறியது. இது எந்தளவிற்கு சாத்தியம் என்று எனக்குத் தெரியவில்லை.

தற்போது மருத்துவர்கள் இந்நோய்க்கான தடுப்பு ஊசி போட்டதும் பலனளிக்காது என்றும் இதன் பலன் தெரிய மூன்று அல்லது ஐந்து வருடங்கள் கூட ஆகலாம் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் இந்த மருந்து முட்டையிருந்து தயாரிக்கப்படுவதால் பன்றிக் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் மட்டுமே போட வேண்டும் என்றும், அப்படி இல்லாதவர்கள் போட்டால் பக்க விளைவுகள் ஏற்படும் என்றும் கூறியுள்ளனர். இதனால் பொது மக்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.

முட்டை அசைவம் என்று சொல்பவர்களும், ஐப்பன் சீசனில் மாலை போட்டுக் கொண்டவர்களுக்கு இந்நோய் தாக்கினாலும் எப்படி இந்த மருந்தைப் போடப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த மருந்தைப் போடும் இடத்தில் கட்டணம் பெற்றுபவர்கள் மருந்தைப் போட்டுவிட்டு அதற்கான எந்த ஒரு அத்தாட்சியும் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதாவது இந்த மருந்தைப் போட்டுக் கொண்டவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு காரணமானவர்களை கண்டு பிடிப்பது கடினமாகிவிடும். எது எப்படியோ மொத்தத்தில் இந்நோய் அனைவரையும் பாடாய்படுத்திக் கொண்டிருப்பது என்பது மட்டும் உண்மை. இறைவன் நம் அனைவரையும் இந்நோயிருந்து விடுவிக்குமாறு பிரார்த்திக்கிறேன்.

0 comments: